தமிழ்நாடு

tamil nadu

சிறுமிக்கு போலீசார் கை விலங்கிட்டு அழைத்துச் சென்ற விவகாரம்; தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் விசாரணை!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 29, 2023, 11:10 AM IST

Updated : Nov 29, 2023, 11:52 AM IST

NCPCR Priyank Kanungo: கோத்தகிரியில் 15 வயது சிறுமியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த கை விலங்கிட்டு போலீசார் அழைத்துச் சென்றது தொடர்பாக, தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத் தலைவர் நேரில் விசாரணை மேற்கொண்டார்.

NCPCR Priyank Kanungo
சிறுமிக்கு போலீசார் கை விலங்கிட்டு அழைத்துச் சென்ற விவகாரம் - தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய விசாரணை

சிறுமிக்கு போலீசார் கை விலங்கிட்டு அழைத்துச் சென்ற விவகாரம் - தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய விசாரணை

நீலகிரி: நீலகிரி மாவட்டம், உதகையைச் சேர்ந்த 15 வயது சிறுமியை போக்சோ வழக்கு தொடர்பாக கோத்தகிரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த கை விலங்கிட்டு போலீசார் அழைத்துச் சென்றதாக புகார் எழுந்துள்ளது. இது குறித்து தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் பிரியங்க் கனுங்கோ, உதகை அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் சரஸ்வதியிடம் நேற்று (நவ.28) நேரில் விசாரணை மேற்கொண்டார்.

இதை அடுத்து, கோத்தகிரியில் தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத் தலைவர் பிரியங்க் கனுங்கோ தலைமையில், குழந்தைகள் உரிமை பாதுகாப்பு குறித்த சிறப்பு விழிப்புணர்வு அமர்வு நடைபெற்றது. இதில் 202 மனுக்கள் பெறப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து, தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத் தலைவர் பிரியங்க் கானூன்கோ செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, “கோத்தகிரியில் கடந்த நவ.7-ஆம் தேதி 15 வயது சிறுமிக்கு காவல் துறையினர் கை விலங்கிட்டு, நீதிமன்றத்துக்கு அழைத்துச் சென்றது தொடர்பாக தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்துக்குத் தெரிய வந்தது.

இதை அடுத்து நேரில் விசாரணை நடத்தப்பட்டது. இதில் சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் நேரில் விளக்கம் கேட்கப்பட்டது. மேலும், இது தொடர்பான விரிவான அறிக்கையை ஆணையத்திற்கு அனுப்பி வைக்குமாறு கூறப்பட்டு உள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமியிடமும் நேரில் விசாரணை நடத்தப்பட்டு உள்ளது" என்று தெரிவித்தார்.

மேலும் இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமி தரப்பு வழக்கறிஞர் கூறுகையில், “சிறுமியிடம் தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் விசாரணை நடத்தியுள்ளார். மேலும், 15 வயது சிறுமிக்கு கை விலங்கிட்டு அழைத்துச் சென்ற அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையத் தலைவர் கூறியுள்ளார்" என தெரிவித்துள்ளார்

இதையும் படிங்க:"மலைக்கிராம மாணவர்கள் வெளியூர் சென்று உயர்கல்வி பயில வேண்டும்" - வேலூர் ஆட்சியர் அறிவுறுறுத்தல்!

Last Updated :Nov 29, 2023, 11:52 AM IST

ABOUT THE AUTHOR

...view details