தமிழ்நாடு

tamil nadu

இல்லம் தேடி கல்வி திட்டம்..திராவிட கல்வி திட்டம் என்பதால் வரவேற்பு - கி. வீரமணி

By

Published : Nov 1, 2021, 8:51 PM IST

கி. வீரமணி

இல்லம் தேடி கல்வி திட்டம், திராவிட கல்வி திட்டம் என்பதால் வரவேற்பதாகவும், இது அரசின் நல்ல முயற்சி என்றும் திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி தெரிவித்துள்ளார்.

நீலகிரி:உதகை அருகே தனியார் கலை கல்லூரி பட்டமளிப்பு நிகழ்ச்சி இன்று (நவ.1) நடைபெற்றது. இதில் திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தமிழ்நாடு என்று பெயர் வைக்கப்பட்ட ஜூலை 18 ஆம் தேதி தமிழ்நாடு தினமாக கொண்டாடப்படும் என்று அரசு அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது. தமிழ்நாடு என்று பெயர் வைக்கபட்ட நாளைத்தான் தமிழ்நாடு தினமாக கொண்டாட வேண்டுமே தவிர, சீரமைப்பு செய்த நாளை அல்ல என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், தமிழ்நாடு அரசு கொண்டு வந்துள்ள இல்லம் தேடி கல்வி திட்டம் திராவிட கல்வி திட்டம் என்பதால் வரவேற்பதாகவும், இது அரசின் நல்ல முயற்சி என்றார். முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் நடைபெற்ற சோதனை பழிவாங்கும் நடவடிக்கை இல்லை. சட்டம் தன் கடமையை செய்யும். கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணையால் நீலகிரி மாவட்டம் ஒரு தனி நாடு போல மாறி உள்ளது" என்றும் அவர் தெரிவித்தார்.

கி. வீரமணி பேட்டி

இதையும் படிங்க: வ.உ.சி வாழ்க்கை வரலாறு குறித்த வீடியோ வெளியீடு!

ABOUT THE AUTHOR

...view details