தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அரசு பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு மின்னணு மற்றும் தகவல் தொடர்பியல் துறையில் பயிலும் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் அழகரசன், செல்வி ரீத்திகா, செல்வி, ஷாஹீன், பேகம், கிருத்திக் ஸ்ரீராம் ஆகிய மாணவர்கள் இணைந்து நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் ஆனந்தகுமார் அறிவுறுத்தலின்படி, துறைத் தலைவி கவிதா வழிகாட்டுதலோடு உடல் இயக்கத்தை கண்காணிக்கும் தானியங்கி கருவியை கண்டுபிடித்துள்ளனர்.
இந்தக் கருவியானது மனித ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு, உயர் ரத்த அழுத்தம், குறைந்த ரத்த அழுத்தம், ரத்தத்தில் உள்ள ஆக்ஸிஜன் அளவு, உடல் வெப்பநிலை ஆகியவற்றைக் கண்டுபிடிப்பதோடு மாரடைப்பையும் முன்கூட்டியே கண்டறிந்து தெரிவித்துவிடும்.