தமிழ்நாடு

tamil nadu

மினிபஸ் கவிழ்ந்து காயமடைந்தவர்களுக்கு வேளாண் துறை அமைச்சர் ஆறுதல்!

By

Published : Nov 3, 2019, 4:45 PM IST

agri minister consoled the mini bus accident people

தஞ்சாவூர்: உமையாள் புரம் அருகே மினிபஸ் கவிழ்ந்ததில் காயமடைந்த பயணிகளை கும்பகோணம் அரசு மருத்துவமனையில் வேளாண்மைத் துறை அமைச்சர் இரா. துரைக்கண்ணு நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

பாபநாசத்திலிருந்து 30 பயணிகளை புள்ளப்பூதங்குடிக்கு ஏற்றிச்சென்ற மினிபஸ் எதிர்பாராத விதமாக உமையாள் புரம் கிராமம் அருகே சாலையோரம் வயலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் காயமடைந்த நான்கு பயணிகள் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சிகிச்சை பெற்று வரும் நான்கு பயணிகளை வேளாண்மைத் துறை அமைச்சர் இரா. துரைக்கண்ணு, தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை உள்ளிட்டோர் பார்வையிட்டு ஆறுதல் கூறினர். பின்னர் அவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை முறைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தனர். இந்நிகழ்வின் போது கும்பகோணம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராமநாதன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

இதையும் படிங்க: சுஜித் பெற்றோர்களுக்கு டிடிவி தினகரன் ஆறுதல்!

Intro:தஞ்சாவூர் நவ 02Body:உமையாள்புரம் கிராமத்தில் சிற்றுந்து கவிழ்ந்ததில் காயமடைந்த பயணிகளை மாண்புமிகு வேளாண்மைத் துறை அமைச்சர் அவர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டம், உமையாள்புரம் கிராமத்தில் சிற்றுந்து கவிழ்ந்ததில் காயமடைந்த பயணிகளை கும்பகோணம் அரசு மருத்துவமனையில் மாண்புமிகு வேளாண்மைத் துறை அமைச்சர் திரு.இரா.துரைக்கண்ணு அவர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
பாபநாசம் வட்டம், கபிஸ்தலம் சரகம், உமையாள்புரம் கிராமத்தில் பாபநாசத்திலிருந்து புள்ளப்பூதங்குடிக்கு சுமார் 30 பயணிகளுடன் சென்ற சிற்றுந்து சாலையோரம் வயலில் கவிழ்ந்தது. இதில் 4 பயணிகளுக்கு காயம் ஏற்பட்டு, அவர்கள் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
காயமடைந்து கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பயணிகளை வேளாண்மைத் துறை அமைச்சர் .இரா.துரைக்கண்ணு அவர்கள், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அண்ணாதுரை பார்வையிட்டு ஆறுதல் கூறினர். சிற்றுந்து விபத்தில் காயமடைந்தவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தனர்.
இந்நிகழ்வின் போது கும்பகோணம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.ராம.ராமநாதன், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் திரு.மோகன், கும்பகோணம் நிலவள வங்கித் தலைவர் திரு.சோழபுரம் அறிவழகன், பாபநாசம் நகர வங்கி துணைத் தலைவர் .சதீஷ், பசுபதிகோவில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் . முத்து மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.
Conclusion:Tanjore sudhakaran 9976644011

ABOUT THE AUTHOR

...view details