தென்காசி: தென்காசி மாவட்டம் சிவகிரி தாலுகா பகுதிக்கு உட்பட்ட தளவாய்புரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கருத்ததுரை. இவரது மகன் மாரிச்செல்வம் (29). இவர் அதே பகுதியில் விவசாயம் செய்து வருகிறார். இந்த நிலையில், நேற்று (அக.27) காலை அவரது தாய் மற்றும் தந்தை ஆகிய இருவரும் விவசாய வேலைக்காக சென்றதாகக் கூறப்படுகிறது.
பின்னர், இருவரும் நேற்று மாலை 4 மணியளவில் வேலை முடிந்து வீட்டுக்கு வந்துள்ளனர். அப்போது, வீட்டைப் பூட்டி இருப்பதை கண்ட கருத்ததுரை தம்பதி, நீண்ட நேரம் அழைத்துள்ளனர். பின்னர் சந்தேகமடைந்த அவரது பெற்றோர், வீட்டின் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்த போது மாரிச்செல்வம் தற்கொலை செய்து கொண்ட நிலையில் சடலமாக கிடந்துள்ளார். அதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த மாரிச்செல்வத்தின் பெற்றோர், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் வீட்டின் முன் வாசல் கதவை உடைத்து உள்ளே சென்றதாகக் கூறப்படுகிறது.