தமிழ்நாடு

tamil nadu

கூலித் தொழிலாளி வெட்டிக் கொலை-குற்றவாளிக்கு வலை

By

Published : Jul 22, 2021, 1:36 PM IST

கூலி தொழிலாளி வெட்டிக் கொலை

தென்காசியில் கூலித் தொழிலாளியை வெட்டிக் கொலை செய்தவரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

தென்காசி: சங்கரன்கோவில் அருகேயுள்ள கண்டிகைப் பேரி கிராமத்தைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி முத்துப்பாண்டி (35). இவரும் சங்கரன்கோவில் அருகேயுள்ள களப்பாகுளம் இந்திரா காலனியைச் சேர்ந்த செல்லத்துரை மகன் மரியராஜ் (32) என்பவரும் உறவினர்கள். இருவரும் களப்பாகுளம் காலனி அருகேயுள்ள கிணற்றில் அடிக்கடி மது அருந்துவது வழக்கம்.

இந்நிலையில், நேற்று (ஜூலை 21) மாலை சீவலராயனேந்தல் செல்லும் வழியில் முத்துப்பாண்டியை மரியராஜ் சரமாரியாக அரிவாளால் வெட்டியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த முத்துப்பாண்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

கொலை குற்றவாளிக்கு போலீஸ் வலை

இது குறித்த தகவலறிந்தது சம்பவ இடத்திற்கு வந்த சங்கரன்கோவில் தாலுகா காவல் துறையினர், முத்துப்பாண்டியின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், தலைமறைவாக உள்ள மரியராஜை தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும், கொலைக்கான காரணம் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொலையான முத்துப்பாண்டி தனது அண்ணன் வேல்முருகனை கொன்ற வழக்கு கரிவலம்வந்தநல்லூர் காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளது. இதேபோல் தப்பி ஓடிய மரியராஜ் மீது செயின் பறிப்பு, அடி தடி, தகராறு போன்ற பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இதையும் படிங்க: வாங்கிய சிகரெட்டுக்கு காசு கேட்ட கடைக்காரர் கொலை: மூவர் கைது

ABOUT THE AUTHOR

...view details