தமிழ்நாடு

tamil nadu

பேருந்தில் வாக்குவாதம்: பெண் பயணியை அடிக்க முயலும் ஓட்டுநர்

By

Published : Aug 17, 2021, 1:07 PM IST

பெண் பயணியை அடிக்க முயலும் ஓட்டுநர்
பெண் பயணியை அடிக்க முயலும் ஓட்டுநர் ()

தென்காசி மாவட்டத்தில் அரசு பேருந்தில் பெண் பயணியை ஓட்டுநர் அடிக்க முயலும் காணொலி காண்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தென்காசி:கடையம் முதல் ஆலங்குளம் செல்லும் பேருந்தில் பயணம் செய்துவந்த பெண் ஒருவர் தன்னை குத்தபாஞ்சான் பகுதியில் இறக்கிவிடுமாறு தினமும் பேருந்தில் செல்லும்போது கூறியிருக்கிறார்.

ஆனால் பேருந்து ஓட்டுநரும் நடத்துநரும் பெண்ணை குத்தபாஞ்சான் பகுதியில் இறக்கிவிடாமல், அடுத்த பேருந்து நிறுத்தத்தில் இறக்கிவிட்டுள்ளனர். இது தொடர்ச்சியாக நிகழ, நடத்துநரிடம் அந்தப் பெண் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

அப்போது ஆத்திரத்தில் அந்த ஓட்டுநர் பெண்ணிடம் தகாத வார்த்தைகளில் பேசியது மட்டுமல்லாது, தனது செருப்பை கழற்றி அடிக்க முயற்சித்துள்ளார்.

பெண் பயணியை அடிக்க முயலும் ஓட்டுநர்

இந்தக் காணொலி தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தை தொடர்ந்து நடத்துநருக்கு மெமோ கொடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க:15 ஆண்டு கால காத்திருப்பு - முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்த அர்ச்சகர்

ABOUT THE AUTHOR

...view details