தமிழ்நாடு

tamil nadu

தென்காசி அருகே கல்லூரி கட்டிடம் மீது ஏறி மாணவர்கள் தற்கொலை மிரட்டல்

By

Published : May 11, 2022, 11:59 AM IST

தென்காசி அருகே கலை கல்லூரியில் 8 மாணவர்கள் கல்லூரி கட்டிடம் மீது ஏறி தற்கொலை மிரட்டல்
தென்காசி அருகே கலை கல்லூரியில் 8 மாணவர்கள் கல்லூரி கட்டிடம் மீது ஏறி தற்கொலை மிரட்டல் ()

சங்கரன் கோவில் அருகே வழக்கை வாபஸ் பெற கோரி கல்லூரி மாணவர்கள் 8 பேர் கல்லூரி கட்டிடம் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தனர்.

தென்காசி: சங்கரன்கோவில் அருகே உள்ள மேலநீலிதநல்லூரில் இயங்கி வரும் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கலைகல்லூரியில் 1000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த கல்லூரியில் ஹரி கங்காராம் என்பவர் கல்லூரி முதல்வராக உள்ளார்.

இந்நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு இவர் தன்னை தாக்கியதாக பனவடலிசத்திரம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் காவல்நிலையத்தில் 11 மாணவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த புகாரில் உண்மை இல்லை எனவும், தங்கள் மீது போடப்பட்ட வழக்கை வாபஸ் பெற வேண்டும் எனவும் கோரி கல்லூரி மாணவர்கள் சுமார் 8 பேர் கல்லூரி கட்டிடம் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தனர்.

தென்காசி அருகே கலை கல்லூரியில் 8 மாணவர்கள் கல்லூரி கட்டிடம் மீது ஏறி தற்கொலை மிரட்டல்

இதனை தொடர்ந்து மாணவர்களின் பெற்றோர், கல்லூரி நிர்வாகத்தினர், காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் உடன் எட்டப்படாததால் 8 மாணவர்களும் கட்டிடத்தின் மீது ஏறி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து நெல்லை மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குனர் மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதையும் படிங்க:நாமக்கல்லில் கல்லூரி மாணவர்கள் திடீர் போராட்டம்

ABOUT THE AUTHOR

...view details