தமிழ்நாடு

tamil nadu

தொழிற்சாலையின் கொதி நீர் தொட்டிக்குள் விழுந்து தொழிலாளி உயிரிழப்பு!

By

Published : Oct 4, 2022, 6:52 PM IST

Etv Bharat
Etv Bharat ()

சிவகங்கை அருகே தொழிற்சாலையின் கொதிநீர் தொட்டிக்குள் விழுந்து தொழிலாளி உயிரிழந்துள்ளார்.

சிவகங்கை: புதுக்கோட்டை மாவட்டம், திருவப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயபால். இவரது மகன் கிருஷ்ணகுமார். இவர் சமீப காலமாக சிவகங்கையை அடுத்துள்ள உடைகுளத்தில் செயல்பட்டு வரும் தனியாருக்குச் சொந்தமான பீருக்கான மூலப்பொருள் தயாரிக்கும் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்துள்ளார்.

இந்நிலையில், இன்று(அக்.04) இவர் பணியில் இருந்தபோது கொதிநீர் தொட்டிக்குள் தவறி விழுந்ததாக கூறப்படுகிறது. இதனைக்கண்ட சக ஊழியர்கள் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.

அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக அறிவித்துள்ளனர். அவரது உடல் உடல்கூராய்விற்காக பிரேதப்பரிசோதனை அறையில் வைக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகுமாருக்கு திருமணம் ஆகி மூன்று மாத கைக்குழந்தை உள்ளதாக கிருஷ்ணகுமாரின் தந்தை கதறி அழும் சம்பவம் அனைவரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.

இந்தச் சம்பவம் குறித்து சிவகங்கை தாலுகா போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: நெல்லையில் மூடப்பட்டிருந்த கல்குவாரிகள் செயல்பட அனுமதி!

ABOUT THE AUTHOR

...view details