தமிழ்நாடு

tamil nadu

செல்போன் நிறுவனம் அமைப்பதாகக்கூறி நூதன மோசடி - 13 பேர் கைது

By

Published : Sep 26, 2021, 5:41 PM IST

குற்றவாளிகள்13 பேர்
குற்றவாளிகள்13 பேர் ()

பெண்ணிடம் தனியார் செல்போன் நிறுவனம் சார்பில் டவர் அமைக்க முன்பணம் பெற்று தலைமறைவான 13 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

சேலம்: சித்தனூர் பகுதியைச் சேர்ந்த சகாயமேரி என்பவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு, செல்போனில் ஒரு குறுந்தகவல் வந்துள்ளது. அதனைத் தொடர்ந்து குறுந்தகவலில் இருந்த செல்போன் எண்ணைத் தொடர்பு கொண்டு விசாரித்தபோது, பிரபலமான செல்போன் நிறுவனம் சார்பில் சகாயமேரி நிலத்தில் செல்போன் கோபுரம் அமைக்க உள்ளதாகவும், அதற்காக அட்வான்ஸ் ரூ.30 லட்சமும், மாதவாடகை 35 ஆயிரம் ரூபாயும் தரவேண்டும் எனத் தெரிவித்தனர்.

இதனை நம்பிய அப்பெண்மணி, அடையாளம் தெரியாத நபர்களின் வங்கிக் கணக்கிற்கு தனது வங்கிக்கணக்கு மூலம் முன்பணம் ரூ.6 லட்சத்து 92 ஆயிரத்து 500ரூபாயை செலுத்தியுள்ளார்.

இத்தொகையைப் பெற்றுக்கொண்ட நபர்கள் தனது செல்போன்களை சுவிட்ச் ஆப் செய்து விட்டு தலைமறைவாகியுள்ளனர்.

13 பேர் அதிரடியாக கைது

இதனையடுத்து, ஏமாற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, சேலம் மாநகர சைபர் க்ரைம் பிரிவில் சகாயமேரி புகார் அளித்தார்.

இந்தப் புகார் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க மாநகர காவல் ஆணையர் நஜ்மல் ஹோடா தனிப்படை அமைத்து உத்தரவிட்டார்.

இந்நிலையில் சைபர் க்ரைம் காவல் துறையினர் மேற்கொண்ட தீவிர விசாரணையில், மோசடி கும்பல் பெங்களூருவிவிலிருந்து சேலம் வருவதாக ரகசியத் தகவல் கிடைத்ததில் காவல் துறையினர் சேலம் முழுவதும் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அதையடுத்து சேலம் மத்தியப் பேருந்து நிலையத்தில் இருந்த குற்றவாளிகள், மல்லையா, நவீன், சந்திரசேகர், சுதாகரன்சிவா, தனசேகர், பிரபு உள்ளிட்ட 13 பேரை காவல் துறையினர் சுற்றிவளைத்தனர். பின்னர் குற்றவாளிகளிடம் விசாரித்ததில் குற்றத்தை ஒப்புக்கொண்டனர்.

மேலும் அவர்களிடமிருந்து 2 லேப்டாப்கள், 34 செல்போன்கள், 45 சிம்கார்டுகள், 20 வங்கிகணக்குப் புத்தகங்கள், 48,500 ரூபாய் பணம் ஆகியவற்றைப் பறிமுதல் செய்த காவல் துறை, அவர்களைக் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்த 13 பேர் கும்பல் பெங்களூருவில் தங்கியிருந்தபடியே தமிழ்நாடு முழுவதும் செல்போன் டவர் அமைப்பதாகக் கூறி, பலரிடம் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க:பேக்கரி ஊழியர் வெட்டி கொலை

ABOUT THE AUTHOR

...view details