தமிழ்நாடு

tamil nadu

”சந்திராயன் 3 வெற்றிக்கு சேலத்தில் தயாரிக்கப்பட்ட மோட்டார்களே முக்கிய காரணம்” - இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி கண்ணன்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 5, 2023, 5:52 PM IST

சந்திராயன் 3 திட்டம் வெற்றி பெற சேலம் சோனா கல்லூரியில் தயாரிக்கப்பட்ட பிரத்யேக மோட்டார்களே முக்கிய காரணம், இந்த மோட்டார் இல்லை என்றால் சந்திராயன் 3 திட்டம் முழுவதும் வீணாகி இருக்கும் என்று இஸ்ரோவின் முன்னாள் விஞ்ஞானியும் கல்லூரியின் பேராசிரியருமான கண்ணன் தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி கண்ணன்

சேலம்:சந்திராயன் 3 விண்கலம் கடந்த ஆகஸ்ட் 23ஆம் தேதி வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியது. இந்தியாவின் விண்வெளி சாகசத்தில் புதிய அத்தியாயத்தை சந்திராயன் 3 படைத்தது. இந்த வெற்றியை இந்தியா முழுவதும் ஒவ்வொருவரும் கொண்டாடி மகிழ்ந்தனர். இந்த நிலையில் இந்த சந்திராயன் 3 வெற்றிகரமாக தரை இறங்கியதற்கு முக்கிய காரணம் சேலத்தில் தயாரிக்கப்பட்ட மோட்டார்கள் என்று இஸ்ரோவின் முன்னாள் விஞ்ஞானியும் சோனா கல்லூரியின் பேராசிரியருமான கண்ணன் தெரிவித்தார்.

இதுகுறித்து இஸ்ரோவின் முன்னாள் விஞ்ஞானி கண்ணன் செய்தியாளர் சந்திப்பில் கூறுகையில், ”சந்திரயான்-3 விண்ணில் செலுத்துவதற்கு ஏவுகணை வாகனம் மார்க்-III (எல்விஎம் 3) இல் பயன்படுத்த கல்லூரியின் 'சோனாஸ்பீடு' SonaSpeed (Sona special power electronics and electrical drive) என்பது சோனா கல்லூரியால் 2003இல் நிறுவப்பட்ட ஆய்வு மற்றும் மேம்பாட்டு (R&D) பிரிவாகும். இந்த 'சோனாஸ்பீடு' குழுவால் தயாரிக்கப்பட்ட ஸ்டெப்பர் மோட்டாரை இஸ்ரோ எடுத்துள்ளது.

சோனாஸ்பீடு என்பது விண்வெளிக்கு பயணம் செய்ய, சந்திரயான்-3 ஏவுகணை வாகனமான எல்விஎம் 3, கடந்த வாரம் சந்திரயான்-3 உடன் வெற்றிகரமாக ஒருங்கிணைக்கப்பட்டது. SonaSpeed இன் சிம்ப்ளக்ஸ் இயந்திரம் ராக்கெட்டில் திரவ எரிபொருள் மற்றும் ஆக்ஸிஜனேற்ற கலவை விகிதத்தைக் கட்டுப்படுத்த பயன்படுத்தப்படுகிறது. சந்திரயான் - 3 விண்கலத்தை தூக்கி பூமியின் சுற்றுப் பாதையில் நிலைநிறுத்திய LVM-3 ராக்கெட்டில் அதன் பயன்பாட்டிற்காக சிம்ப்ளக்ஸ் இயந்திரம் உருவாக்கும் பொறுப்பை சோனா கல்லூரி இளம் குழுவிடம் ஒப்படைத்தது.

ராக்கெட் இயந்திரத்தின் சிம்ப்ளக்ஸ் இயந்திரத்தை இளம் ஆராய்ச்சியாளர் குழு உருவாக்கியது. சோனா காலேஜ் ஆஃப் டெக்னாலஜியில் ஆர் அன்ட் டி (R&D) வேலைகள் மூலம் இஸ்ரோவின் நிலவு பணிக்கு பங்களிப்பதில் நாங்கள் பாக்கியம் பெற்றுள்ளோம்.

இஸ்ரோவின் எதிர்கால விண்வெளிப் பணிகளையும் ஆதரிப்பதில் ஆராய்ச்சிக் குழு உறுதி பூண்டுள்ளது என்றார். மேலும் அவர், அடுத்ததாக ககன்யான் திட்டத்திற்கு 12 மோட்டர்கள் அனுப்பப்பட்டுள்ளது. சோதனைக்கு பிறகு இஸ்ரோ அங்கீகாரம் வழங்கும். இந்த சோதனையானது ஆறு மாதம் நடைபெறும். ககன்யான் திட்டத்திற்கு இந்த மோட்டார் பயன்படுத்தப்பட உள்ளது .

சந்திராயன் 3 வெற்றிகரமாக விண்ணில் தரை இறங்கியதற்கு இந்த மோட்டார்கள் முக்கிய காரணம். இந்த மோட்டார் பணிகள் சரிவர இல்லாமல் இருந்திருந்தால் சந்திராயன் 3 திட்டம் முழுவதும் வீணாகி இருக்கும். அடுத்ததாக சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா விண்கலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து ககன்யான் விண்கலம் திட்டத்திற்கும் சேலத்தில் தயாரிக்கப்பட்ட பிரத்யேக மோட்டார்கள் அனுப்பப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க:சேலம் சோனா கல்லூரியில் சந்திரயான்-3 வெற்றி விழா!

ABOUT THE AUTHOR

...view details