தமிழ்நாடு

tamil nadu

மின்கம்பியை மிதித்த கணவன் மனைவி உயிரிழப்பு

By

Published : Oct 1, 2022, 5:50 PM IST

electric shock  husband and wife died  ranipet  ranipet electric shock  கணவன் மனைவி பலி  மின்கம்பி  மின்சாரம்  ராணிப்பேட்டை  மின்சாரம் தாக்கி பலி

ஆற்காடு அருகே அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த கணவன் மனைவி இருவரும் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர்.

ராணிப்பேட்டை:ஆற்காடு அடுத்த பெரிய குக்குண்டி கிராமத்தை சேர்ந்தவர்கள் சரவணன் - சாந்தி தம்பதி. இவர்களுக்கு சொந்தமாக அப்பகுதியில் விவசாய நிலம் உள்ளது. இந்த நிலையில் இன்று காலை நிலத்திற்கு நீர் பாய்ச்சுவதற்காக சரவணன் சென்றுள்ளார். அப்போது அங்கு அறுந்து கிடந்த மின் கம்பியை கவனிக்காத சரவணன், அதனை மிதித்ததால், மின்சாரம் தாக்கி தூக்கிவீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இவரது அலறல் சத்தம் கேட்டு, அவரது மனைவி சாந்தி நிலத்திற்குச் சென்று பார்த்துள்ளார். அப்போது சரவணன் மீது மின்சாரம் பாய்ந்தது தெரியாமல், அவரை தூக்க முயன்றுள்ளார். அதில், அவர் மீதும் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள், இது குறித்து காவலர்களுக்கும், மின்சார துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

பின்னர் சம்பவ இடத்திற்குச் சென்ற காவல்துறையினர், இருவரது உடலையும் மீட்டு உடற்கூராய்வுக்காக, ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: நெல்லையில் அணைக்கட்டில் மூழ்கி 2 குழந்தைகள் உயிரிழப்பு

ABOUT THE AUTHOR

...view details