தமிழ்நாடு

tamil nadu

கோவிலூர் ஜல்லிக்கட்டு - சீறிப்பாய்ந்த காளைகளை தாவி பிடித்த வீரர்கள்

By

Published : Mar 1, 2022, 6:03 PM IST

r

புதுக்கோட்டையில் இன்று (மார்ச் 1) நடந்த ஜல்லிக்கட்டுப் போட்டியில் 650 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர்.

புதுக்கோட்டை:ஆலங்குடி அருகேவுள்ள கோவிலூர் முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு 57ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டுப் போட்டி இன்று (மார்ச் 1) நடைபெற்றது. இந்த ஜல்லிக்கட்டுப் போட்டியை மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த ஜல்லிக்கட்டில் புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 650 காளைகள் பங்கேற்றன. 300 மாடுபிடி வீரர்கள் கலந்துகொண்டனர்.

கோவிலூர் ஜல்லிக்கட்டு

வாடிவாசலில் இருந்து வெளியேறி சீறிப்பாய்ந்து வந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் அடக்கினர். இந்த ஜல்லிக்கட்டுப் போட்டியில் சிறந்த காளைகளுக்கும், சிறந்த மாடுபிடி வீரர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

இதையும் படிங்க:பெரம்பலூர் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி மறுப்பு : பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்

ABOUT THE AUTHOR

...view details