தமிழ்நாடு

tamil nadu

புதுக்கோட்டையில் தேர் கவிழ்ந்து விபத்து- 10 பேர் படுகாயம்

By

Published : Jul 31, 2022, 2:52 PM IST

புதுக்கோட்டையில் தேர் கவிழ்ந்து விபத்து- 10 பேர் படுகாயம்

புதுக்கோட்டை திருக்கோகர்ணம் பிரகதாம்பாள் கோவில் தேரோட்டத்தில் தேர் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

புதுக்கோட்டை:புதுக்கோட்டை மாவட்டம், திருக்கோகரணத்தில் உள்ள பிரசித்திபெற்ற பிரகதாம்பாள் உடனுறை கோகர்ணேஸ்வரர் கோயிலில் ஆடிப்பெரும்திருவிழாவை முன்னிட்டு ஆடிப்பூர தேரோட்டம் இன்று(ஜூலை 31) நடைபெற்றது. தேரோட்டம் தொடங்கிய நிலையில் கோயில் அருகிலேயே தேர் சாய்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இதில் ஐந்துக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ள நிலையில் 5 பேர் மயக்கமுற்றனர். இதனையடுத்து ஆம்புலன்ஸ் மூலம் காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

தேர் கவிழ்ந்து விபத்து

இதில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, புதுக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினர் வை.முத்துராஜா, ஆர்டிஓ கருணாகரன் ஆகியோர் முன்னிலையில் மீட்புப்பணி நடந்தது.

இதையும் படிங்க:திருவேற்காடு நர்சிங் மாணவி தற்கொலை விவகாரம்; சிபிசிஐடிக்கு மாற்றம்

TAGGED:

10 injured

ABOUT THE AUTHOR

...view details