புதுக்கோட்டைவசந்தபுரி நகரைச்சேர்ந்தவர் சோலை கணேசன் (வயசு 38). இவர் திருமணமாகி மனைவியை பிரிந்து வசித்து வருகிறார். சோலைகணேசனுக்கு ஃபேஸ்புக் சமூக வலைதளம் மூலம் சிங்கப்பூரை சேர்ந்த ஆரோக்கியமேரி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. அவரை சோலை கணேசன் சிங்கப்பூருக்குச் சென்று கடந்த 2010ஆம் ஆண்டு சிங்கப்பூரில் பதிவுத் திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்தின்போது வரதட்சணையாக ரூ.72 லட்சத்து 85 ஆயிரத்தை ஆரோக்கியமேரியிடம் சோலை கணேசன் குடும்பத்தினர் பெற்றுள்ளனர். இந்த நிலையில் சோலை கணேசனுக்கு 17 வயது சிறுமியை திருமணமாக செய்து வைக்க குடும்பத்தினர் ஏற்பாடு செய்துள்ளனர். இது குறித்து ஆரோக்கியமேரிக்கு தெரியவந்துள்ளது.
மேலும் சோலை கணேசனுக்கு ஏற்கெனவே திருமணமானதை மறைத்துவிட்டு தன்னை பதிவுத்திருமணம் செய்து கொண்டதும் தெரியவந்தது. இதுதொடர்பாக புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் சோலை கணேசன், அவரது தாய் ராஜம்மாள், சகோதரி கமல ஜோதி, சகோதரர் முருகேசன் ஆகியோர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.