மயிலாடுதுறை: சீர்காழி அருகேவுள்ள கொள்ளிடம் ஆற்றின் கரையோர கிராமமான அளக்குடியைச் சேர்ந்தவர் விவசாயி அண்ணாதுரை. இவரது பசு அதே கிராமத்தைச் சேர்ந்த ரவி, பாலசுந்தரம், மன்மதன், சுபாஷ் ஆகியோருக்குச் சொந்தமான வயல்களில் மேய்ந்துள்ளது.
இதனால், ஆத்திரமடைந்த வயிலின் உரிமையாளர்கள் நான்கு பேரும் சேர்ந்து பசுவின் இரண்டு காதுகள், வால், இடுப்புப் பகுதிகளில் அரிவாளால் வெட்டினர். இதனால், அந்தப் பசு ரத்தக் காயங்களுடன் மரண ஓலமிட்டு துடிதுடித்துக்கொண்டிருந்தது.
இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அண்ணாதுரை, இது குறித்து வயலின் உரிமையாளர்கள் நான்கு பேர் மீதும் கொள்ளிடம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர், ரவி, பாலசுந்தரம் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர்.