தமிழ்நாடு

tamil nadu

முன்விரோதத்தால் இருவரை காவலர் லத்தியால் தாக்கும் வீடியோ

By

Published : Sep 15, 2021, 6:09 AM IST

police-attacked-2-person-in-sirkali-video-went-viral-on-social-media

முன்விரோத தகராறால் இருவரை காவலர் லத்தியால் தாக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

மயிலாடுதுறை:சீர்காழி ஈசானிய தெருவைச் சேர்ந்தவர் தனசேகரன்(35). இவர், வைத்தீஸ்வரன் கோயில் காவல்நிலையத்தில் காவலராகப் பணியாற்றிவருகிறார். தனசேகரன் உறவினர்களுக்கும் அதே பகுதியில் உள்ள பன்னீர்செல்வம் நகரைச் சேர்ந்த தேவேந்திரன் மகன் பிரதீப்(20) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது.

இந்நிலையில், கடந்த 12ஆம் தேதி பிரதீப் அவரது உறவினரான தெற்கு பண்டாரவடை கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ் மகன் அமிர்தராஜ்(35) என்பவருடன் வந்து தனசேகரன் உறவினர் வீட்டில், தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அறிந்த தனசேகரன் சம்பவ இடத்திற்கு வந்து அமிர்தராஜ், பிரதீபை சமாதானம் செய்துள்ளார். அவர்கள் சமாதானம் ஆகமால் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில், ஆத்திரமடைந்த காவலர் தனசேகரன் தான் வைத்திருந்த லத்தியால், பிரதீப், அமிர்தராஜ் ஆகியோரை சரமாரியாக தாக்கியுள்ளார்.

முன்விரோதத்தால் இருவரை காவலர் லத்தியால் தாக்கும் வீடியோ

இதில், பலத்த காயமடைந்த அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சீர்காழி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதுதெடார்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், தனசேகரனை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இந்தச்சூழ்நிலையில், பிரதீப், அமிர்தராஜ் ஆகிய இருவரை காவலர் தனசேகரன் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவிவருகிறது.

இதையும் படிங்க:வர்த்தக சங்கத் தலைவரைத் தாக்கிய காவலர் இடமாற்றம்

ABOUT THE AUTHOR

...view details