நாகப்பட்டினம்:ஆண்டுதோறும் உலக இளைஞர் தினம் ஆகஸ்ட் 12ஆம் தேதி இளைஞர்களை கொண்டாடும் வகையில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மயிலாடுதுறையில் உலக இளைஞர் தினத்தை கொண்டாடும் வகையில் தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சி சார்பில் உலக இளைஞர் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக அரசின் கட்டுமான தொழிலாளர்கள் நல வாரிய தலைவர் பொன் குமார் கலந்து கொண்டு சிறப்பு உரையாற்றினார்.
பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, "திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக முதலமைச்சராக பொறுப்பு ஏற்ற பின்னர் இளைஞர்களுக்கு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்த நிலையில் அதை நடைமுறை படுத்தப்பட்டும் உள்ளன. குறிப்பாக, இளைஞர்களின் திறனை மேம்படுத்த திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
தனியார் துறையில் மாவட்ட வாரியாக வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு, இதுவரை 4 லட்சம் இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர். கல்வியிலும் இளைஞர்களை ஊக்கப்படுத்தவே இட ஒதுக்கீடு போன்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. ஆனால் மருத்துவக் கல்வியை சிதைக்கும் வகையில் மத்திய அரசு நீட் தேர்வை அமல்படுத்தி உள்ளது. அதனை விலக்குவதற்கு தமிழக அரசு இயற்றிய சட்டத்துக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் மத்திய அரசு ஒப்புதல் அளிக்கவில்லை.
இதையும் படிங்க:அண்ணே அந்த பணப் பை..! பிரதமரால் பாராட்டப்பட்ட சலூன் நூலகத்திற்கு அண்ணாமலை விசிட்!