தமிழ்நாடு

tamil nadu

மயிலாடுதுறை புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அடிக்கல் நாட்டு விழா.. ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்...

By

Published : Jan 19, 2022, 10:17 AM IST

மயிலாடுதுறை மாவட்டத்திற்கான புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டடம் கட்டுவதற்காக அடிக்கல் நாட்டு விழாவை காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று ( ஜனவரி 19 ) ஆம் தேதி தொடங்கி வைக்கிறார்.

மயிலாடுதுறை மாவட்டத்திற்கான புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக அடிக்கல் நாட்டு விழா ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்
மயிலாடுதுறை மாவட்டத்திற்கான புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக அடிக்கல் நாட்டு விழா ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்

மயிலாடுதுறைமக்களின் கால் நூற்றாண்டு கனவாக இருந்த தனி மாவட்டம் கோரிக்கையை 2020 ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நிறைவேற்றினார்.

தமிழ்நாட்டின் 38-வது மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டம் உருவாக்கப்படும் என்று 2020-ஆம் ஆண்டு மார்ச் மாதம் அரசால் அறிவிக்கப்பட்டு, மாவட்ட எல்லை வரையறை பணிக்காகச் சிறப்பு அலுவலராக லலிதா ஐஏஎஸ் அதே ஆண்டு ஜூலை 15-ஆம் தேதி நியமிக்கப்பட்டார். அதன் பின்னர், 2020 டிசம்பர் 28-ஆம் தேதி மயிலாடுதுறை புதிய மாவட்டமாகத் தொடங்கப்பட்டு, மாவட்ட ஆட்சியராக லலிதா நியமனம் செய்யப்பட்டார்.

மயிலாடுதுறை புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அடிக்கல் நாட்டு விழா

மாயூரநாதர் கீழவீதியிலிருந்த வணிகவரித்துறை அலுவலகம் தற்காலிக கலெக்டர் அலுவலமாக மாற்றப்பட்டு தற்போது செயல்பட்டு வருகிறது. மயிலாடுதுறை அருகே பால்பண்ணை பகுதியில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான 21 ஏக்கர் இடத்தை ஆட்சியர் அலுவலகம், கட்டுவதற்காக தருமை ஆதீனம் வழங்கினார்.

அதற்கான பத்திரப்பதிவு நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டு ரூ.114 கோடி மதிப்பீட்டில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைப்பதற்கான ஒப்பந்தப்புள்ளி விடப்பட்டிருந்தது.

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம்

இந்நிலையில் இன்று ஜனவரி 19 ஆம் தேதி புதிய நிரந்தர ஆட்சியர் அலுவலகம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா காணொலி காட்சி மூலம் நடக்கிறது. சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் காலை 10 மணிக்கு மேல் மயிலாடுதுறை புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கான அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைக்கிறார்.

இதையும் படிங்க:30 ஆண்டுகள் கோரிக்கை: 38ஆவது மாவட்டமாக உதயமாகிறது மயிலாடுதுறை!

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details