மதுரைமாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களின் அறிமுக கூட்டம் மதுரை புதூரில் நடைபெற்றது. இதில் எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக இணை- ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி. உதயகுமார், திருப்பரங்குன்றம் எம்எல்ஏ ராஜன் செல்லப்பா ஆகியோர் பங்கேற்று உரையாற்றினார்.
இந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு எடப்பாடி பழனிசாமி பேசும் போது, " மதுரை நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்கை அளித்து வெற்றிபெற வைக்க வேண்டும்.
மதுரை என்று சொன்னாலே எம்ஜிஆர்
உள்ளாட்சி அமைப்பு, மக்களுக்குச் சேவை செய்யும் அமைப்பு. உள்ளாட்சியில் பெரும்பான்மையான இடம் கிடைக்கும் போது மேயராக வாய்ப்பு கிடைக்கும். மதுரை மாநகராட்சி மூலமாக, குடிநீர், சாலை, குப்பை அகற்றுதல் உள்ளிட்ட பொறுப்பு மாமன்ற உறுப்பினர்களுக்கு உள்ளது. இதை நிறைவேற்ற வேண்டுமானால் வெற்றி பெற வேண்டும்.
மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என ஜெயலலிதாவும், எம்.ஜி.ஆரும் வாழ்ந்தவர்கள். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்தே மதுரை அதிமுகவின் கோட்டை. 1978 ஆம் ஆண்டும் மதுரையை எம்.ஜி.ஆர் மாநகராட்சியாக மாற்றினார். அதனைத் தொடர்ந்து கடந்த 44 ஆண்டுக்காலத்தில் பல நன்மைகள் திட்டங்களை மதுரைக்கு செய்து உள்ளோம்.
பொது மேடையை ஏற்பாடு செய்யுங்கள்
திமுக மதுரைக்கு ஏதும் செய்யவில்லை. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்றைய தினம் ஓர் சவால் விட்டார்! உங்களுடைய சவாலை நாங்கள் ஏற்கிறோம். நீட் தேர்வு என்ற நச்சு விதை யார் ஆட்சியில் விதைக்கப்பட்டது. நீட் தேர்வு பற்றி விவாதம் செய்ய பொது மேடையை ஏற்பாடு செய்யுங்கள் நாங்கள் வருகிறோம். மக்கள் தீர்மானிக்கட்டும் எது உண்மையென்று என்றார்.
நோபல் பரிசு
திமுக ஆட்சி வந்தவுடன் நீட் தேர்வு ரத்து என கூறினீர்கள். ஆனால், ஆட்சிக்கு வந்து 9 மாதம் கடந்த நிலையில் நீட் தேர்வு ரத்து செய்யப்படவில்லை.
பொய் பேசுவதற்கான நோபல் பரிசை முதலமைச்சர் மு. க. ஸ்டாலினுக்கு கொடுக்கலாம். தேர்தல் சமயத்தில் நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியம் இருப்பதாக உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
தற்போது தொடர்ந்து மத்தியில் பேசி நீட் தேர்வை ரத்து செய்வோம் என்கிறார். தொடர்ந்து வலியுறுத்தி நீட் தேர்வை ரத்து செய்வதுதான் உங்கள் ரகசியமா?? பிளேட்டை மாற்றும் வேலையை திமுகவினர் செய்து வருகின்றனர். மத்திய அரசைத் தொடர்ந்து வலியுறுத்தி நீட் தேர்வை ரத்து செய்யலாம் என்ற ரகசியத்தை கண்டுபிடித்து வெளியிட்ட உதயநிதி ஸ்டாலினுக்கு டாக்டர் பட்டமே அளிக்கலாம்.
மீண்டும் நீட் தேர்வு
தேர்தலின் போது மட்டுமே இவர்கள் சவால் விடுகின்றனர். தேர்தலுடன் திமுகவின் சாவல் முடிந்துவிடும்.முதலமைச்சர் நீட் குறித்து பொய்யை பரப்புகிறார்.
2010ல் நீட் கொண்டு வந்தது திமுக என மு.க.ஸ்டாலின் ஒப்புக்கொண்டுள்ளார். நீட் என்ற நச்சு விதையை தமிழ்நாட்டில் ஊன்றியது காங்கிரஸ், திமுக. அதன் பின் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த பின் நீட் தேர்வை தடுக்க பல வழக்குகளை தொடர்ந்தோம். உச்சநீதிமன்ற நீதிபதிகள் நீட் ரத்து என கூறினார்கள்.
ஆனால், காங்கிரஸ் கட்சி அதனை எதிர்த்து மறுசீராய்வு மனு தாக்கல் செய்தது. அதனால் தான் நீட் மீண்டும் வந்தது.
நாம் பெற்ற பிள்ளைக்கு அவர் பெயர்