தமிழ்நாடு

tamil nadu

மதுரை முதல் செகந்திராபாத் சிறப்பு ரயில் சேவை மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிப்பு

By

Published : Aug 22, 2022, 3:39 PM IST

மதுரையில் இருந்து தெலங்கானா மாநிலம், செகந்திராபாத்துக்கு புறப்பட்டுச் செல்லும் சிறப்பு ரயிலின் சேவை மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

மதுரை டூ செகந்திராபாத் சிறப்பு ரயில் சேவை மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிப்பு!
மதுரை டூ செகந்திராபாத் சிறப்பு ரயில் சேவை மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிப்பு!

மதுரை:மதுரையிலிருந்து தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்(ஹைதராபாத்) நகருக்கு சிறப்பு ரயில் ஆகஸ்ட் மாதம் வரை இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த ரயில் சேவை செப்டம்பர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதன்படி ’செகந்திராபாத் முதல் மதுரை வாராந்திர சிறப்பு ரயில் (07191) செகந்திராபாத்தில் இருந்து ஆகஸ்ட் 29 முதல் செப்டம்பர் 26 வரை திங்கட்கிழமைகளில் இரவு 09.25 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் இரவு 08.45 மணிக்கு மதுரை வந்து சேரும். மறுமார்க்கத்தில் மதுரை முதல் செகந்திராபாத் வாராந்திர சிறப்பு ரயில் (07192) மதுரையில் இருந்து ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 28 வரை புதன்கிழமைகளில் அதிகாலை 05.30 மணிக்குப்புறப்பட்டு, மறுநாள் காலை 07.25 மணிக்கு செகந்திராபாத் சென்று சேரும்.

இந்த ரயில்கள் திண்டுக்கல், திருச்சி, ஸ்ரீரங்கம், விருத்தாச்சலம், விழுப்புரம், திருவண்ணாமலை, காட்பாடி, சித்தூர், திருப்பதி, ரேனிகுண்டா, கூடூர், நெல்லூர், ஓங்கோல், பாபட்லா, தெனாலி, குண்டூர், மிரியால்குடா, நளகொண்டா ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

இந்த ரயில்களில் ஒரு குளிர்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 3 குளிர்சாதன அடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 12 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 4 இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகள், 2 ரயில் மேலாளர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டிகள் இணைக்கப்படும்’ என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதையும் படிங்க:பரந்தூர் விமான நிலையம்... பத்திர பதிவுத்துறை கூடுதல் ஐஜி சஸ்பெண்ட்... தமிழ்நாடு அரசு அதிரடி

ABOUT THE AUTHOR

...view details