மதுரை:ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு வழக்கில் சிபிஐ தரப்பின் குற்றப்பத்திரிக்கையை நிராகரித்து மதுரை தலைமை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு. மேலும், சிபிஐ தரப்பில் மீண்டும் விசாரணை நடத்தி ஆறு மாதத்தில் புதிய குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
தூத்துக்குடியிலுள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டுமென்று அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட பொது மக்கள் மீது, நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் (மே.2018) போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் 15 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தார்கள்.
இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்தது. அதன் அடிப்படையில், சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் துவங்கியது. துப்பாக்கிச் சூட்டிற்குக் காரணமான மாவட்ட ஆட்சித் தலைவர், மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர், காவல் ஆய்வாளர்கள் ஹரிஹரன், மீனாட்சிநாதன், பார்த்திபன், தாசில்தார்கள் சேகர், கண்ணன், சந்திரன் உள்ளிட்டோர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்திட வேண்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாவட்ட முன்னாள் செயலாளர் கே.எஸ்.அர்ச்சுனன் சிபிஐக்கு புகார் மனு அனுப்பினார். பின்னர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தால் அதன் அடிப்படையில் விசாரணையும் மேற்கொள்ளப்பட்டது.