தமிழ்நாடு

tamil nadu

Madurai AIIMS Hospital: கட்டுமான பணிகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 1, 2023, 10:47 PM IST

எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் விரைவில் தொடங்கும் என மத்திய அரசின் வழக்கறிஞர் கூறிய நிலையில் இது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

high court madurai bench orders submission of report on madurai aiims hospital construction work
Etv Bharat

மதுரைதோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்காக நிதியை ஒதுக்கி, பணியை துரிதப்படுத்த உத்தரவிட வேண்டும் என மதுரையைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் கடந்த 2019ஆம் ஆண்டு உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு விசாரணையின் போது மத்திய அரசு 36 மாதங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் முடிவடையும் என தெரிவித்திருந்தது. இதனையடுத்து இந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

ஆனால், எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் தற்போது வரை தொடங்கப்படவில்லை. நீதிமன்ற உத்தரவு முறையாக பின்பற்றப்படவில்லை. எனவே, மத்திய அரசின் முதன்மைச் செயலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை கொண்ட வழக்கு மீண்டும் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு குறித்த வழக்கு நீதிபதிகள் ரமேஷ், புகழேந்தி ஆகியோரது அமர்வு முன்பு விசாரனைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் குறித்து ஒப்பந்த புள்ளி வெளியிடப்பட்டு கட்டுமான பணிகள் தொடங்கும் நிலையில் உள்ளதாக தெரிவித்தார். இதனை அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை அக்.13 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

இதையும் படிங்க:சாத்தான்குளம் கொலை வழக்கு: சப்-இன்ஸ்பெக்டர் ஜாமீன் மனுவை ஒத்திவைத்தது உயர்நீதிமன்ற மதுரைக்கிளை!

ABOUT THE AUTHOR

...view details