தமிழ்நாடு

tamil nadu

ஓசூரில் குடியிருப்பு அருகே கிடந்த மனித எலும்புக்கூடுகள்

By

Published : Jan 4, 2023, 1:10 PM IST

குடியிருப்பு பகுதி அருகே கிடந்த மனித எலும்புக்கூடு
குடியிருப்பு பகுதி அருகே கிடந்த மனித எலும்புக்கூடு

ஓசூரில் குடியிருப்பு அருகே கிடந்த மனித எலும்புக்கூடை கைப்பற்றி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கிருஷ்ணகிரி:ஓசூர்நேருநகர் அடுத்த ஜீவாநகர் குடியிருப்பு அருகே அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலம் உள்ளது. இந்த இடத்தில் மனித எலும்புக்கூடு கிடந்துள்ளது. அதனைப்பார்த்த அப்பகுதி பொதுமக்கள் ஓசூர் நகர காவல் துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.

இந்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்துக்குச் சென்ற காவல்துறையினர் மனித எலும்புக்கூட்டை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். முதல்கட்ட விசாரணையில் பல மாதங்களாக அந்த எலும்புக்கூடு அங்கு கிடந்திருப்பது தெரிய வந்தது.

இந்த எலும்புக்கூடு இங்கு எப்படி வந்தது என்பது குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். தடயவியல் துறைக்கு எலும்புக்கூட்டின் பாகங்களை அனுப்பி விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

இதையும் படிங்க: சிமெண்ட் வாங்குவது போல் நடித்து பலே திருட்டு.. சிசிடிவி வீடியோ வெளியீடு!

ABOUT THE AUTHOR

...view details