தமிழ்நாடு

tamil nadu

வெளிநாட்டில் இறந்த மகனின் உடலை மீட்டுத் தரக் கோரி தாயார் மனு!

By

Published : Feb 3, 2020, 10:26 PM IST

Updated : Feb 3, 2020, 10:55 PM IST

கரூர்: தாய்லாந்து நாட்டில் சிறையில் தற்கொலை செய்து கொண்ட தனது மகனின் உடலை மீட்டுத்தரக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் அந்நபரின் தாயார் மனு அளித்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Mother's petition to restore bod
Mother's petition to restore bod

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகேயுள்ள கருப்பூர் கிராமத்தில் வசித்து வருபவர் தனலட்சுமி, நடராஜ் தம்பதியினர். இவர்களுக்குப் பிரகாஷ் என்கிற மகன் உள்ளார். தனலட்சுமி கணவனை இழந்து பல ஆண்டுகளாக தவித்து வந்த நிலையில், குடும்பத்தின் வறுமை சூழ்நிலைக்காக கடந்த 2017ஆம் ஆண்டு, அவரது மகன் பிரகாஷ் தாய்லாந்து நாட்டிற்கு வேலைக்காகச் சென்றுள்ளார்.

வேலைக்குச் சென்ற பிரகாஷ் மீது, கடந்த 2018ஆம் ஆண்டு கொலை வழக்கில் தொடர்புடையதாகக் கூறி, அந்நாட்டு காவல்துறை அவரை சிறையில் அடைத்தது. தாய்லாந்தில் சிறைத் தண்டனை அனுபவித்து வந்த பிரகாஷ், சிறையில் தற்கொலை செய்து கொண்டதாக வந்த தகவலையடுத்து, கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன் சம்பந்தப்பட்ட உறவினர்களுக்குத் தகவல் கொடுத்துள்ளார்.

வெளிநாட்டில் இறந்த மகனின் உடலை மீட்டுத் தரக் கோரி தாயார் மனு

இந்நிலையில் பிரகாஷின் தாயார் தனலட்சுமி இன்று, கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து, 'தனது மகனைப் பார்த்து நான்கு வருடங்கள் ஆகிவிட்டன. அவனது உடலை மீட்டு வரும் அளவிற்கு எங்களுக்குப் பொருளாதார வசதியில்லை; தனது மகனுக்கு இறுதிச்சடங்குகள் தங்களது கிராமத்தில் செய்ய நினைக்கிறோம்’ எனக்கூறி மாவட்ட ஆட்சியர் அன்பழகனிடம் தனது மகனின் உடலை மீட்டுத் தரும் படி மனு அளித்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: கேபிள் இணைப்பைத் துண்டித்த தாய் - மகன் தூக்கிட்டு தற்கொலை!

Intro:தாய்லாந்து நாட்டில் இறந்த மகனை மீட்டுத் தரக் கோரி தாயார் மாவட்ட ஆட்சியரிடம் மனு.Body:தாய்லாந்து நாட்டில் இறந்த மகனை மீட்டுத் தரக் கோரி தாயார் மாவட்ட ஆட்சியரிடம் மனு.

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம், முத்தலவாய் ஊராட்சிக்கு உட்பட்ட கருப்பூர் கிராமத்தில் சங்கரன் மலைப்பட்டி தெருவில் வசித்து வருபவர் தனலட்சுமி இவரது கணவன் நடராஜ். இவர்களுக்கு பிரகாஷ் நடராஜ் என்ற மகன் உள்ளார்.

தனலட்சுமி கணவனை இழந்து பல ஆண்டுகளாக தவித்து வந்த நிலையில் குடும்ப சூழ்நிலைக்காக கடந்த 2017 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தாய்லாந்து நாட்டிற்கு வேலைக்காக சென்றுள்ளார் மகன் பிரகாஷ் நடராஜ்.

வேலைக்காக சென்ற அவர் கடந்த 2018 ஆகஸ்ட் மாதம் முதல் அந்நாட்டின் கொலை குற்றவாளியாக சிறை தண்டனை அனுபவித்து வந்ததாக கூறப்படுகிறது. அவர் சிறையில் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வந்ததன் அடிப்படையில் கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன் சம்பந்தப்பட்ட உறவினர்களுக்கு தகவல் அளித்தார்.

மேலும் தாயார் தனலட்சுமி தனது மகனைப் பார்த்து நான்கு வருடங்கள் ஆகிவிட்டது உடலை மீட்டு வர பொருளாதார ரீதியாக வசதியில்லை தனது மகனுக்கு இறுதிச்சடங்கு எனது கிராமத்தில் செய்ய வேண்டும் என கூறி மாவட்ட ஆட்சியர் அன்பழகனிடம் தாய்லாந்து நாட்டில் இறந்த தனது மகனை மீட்டுத் தரக் கோரி மனு அளித்தார்.
Conclusion:
Last Updated :Feb 3, 2020, 10:55 PM IST

ABOUT THE AUTHOR

...view details