ETV Bharat / state

கேபிள் இணைப்பைத் துண்டித்த தாய் - மகன் தூக்கிட்டு தற்கொலை!

author img

By

Published : Feb 3, 2020, 4:53 PM IST

சென்னை: டிவி பார்க்க விடாமல் கேபிள் இணைப்பை தாய் துண்டித்ததால் மகன் விரக்தியடைந்து தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தாம்பரம் பள்ளி மாணவன் தூக்கிட்டு தற்க்கொலை சென்னை பள்ளி மாணவன் தூக்கிட்டு தற்க்கொலை சென்னை பள்ளி மாணவன் தற்க்கொலை Tambaram School Students Suicide Chennai School Students Suicide Chennai School Students Hanging Suicide
Tambaram School Students Suicide

சென்னை தாம்பரம் அடுத்த பீர்க்கன்காரணை, சீனிவாசநகர், லட்சுமி முதல் குறுக்குத் தெருவில் வசித்து வருபவர் கொழஞ்சிநாதன்(48) - சங்கீதா தம்பதி. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். முதல் மகன் தனியார் பள்ளியில் படித்து வருவதாகவும், இரண்டாவது மகன் அமுதீஸ்வரன் (14) மண்ணிவாக்கத்தில் தனியார் பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வருவதாகவும் தெரிகிறது.

இந்நிலையில், கடந்த ஒரு ஆண்டு காலமாக வீட்டில் கேபிள் இணைப்பு கொடுக்கச் சொல்லி பெற்றோரிடம் இரு மகன்களும் கேட்டுக் கொண்டதின் பேரில், கேபிள் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அந்த நாள் முதல் இருவரும் சரியாக படிக்காமல் டிவி பார்த்து வந்ததால், அவரின் தாய் கேபிள் இணைப்பைத் துண்டித்து விட்டு, பணிக்குச் சென்று விட்டார்.

பின்னர் அன்று மாலை 5 மணியளவில் வீட்டில் டிவியை ஆன் செய்து பார்த்த போது இணைப்பு துண்டிக்கப்பட்டிருந்ததால் விரக்தியடைந்த 8ஆம் வகுப்பு பள்ளி மாணவன் அமுதீஸ்வரன் படுக்கறையில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து பீர்க்கன்காரணை காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த காவல் துறையினர் அமுதீஸ்வரனின் சடலத்தைக் கைப்பற்றி, உடற்கூறாய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பள்ளி மாணவன் தூக்கிட்டுத் தற்கொலை

மேலும் இது தொடர்பாக காவல் துறையினர் 174 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து அக்கம்பக்கத்தினர் கூறுகையில், 'அமுதீஸ்வரன் சரியாக படிக்கவில்லை. இதனால் தாயார் கண்டித்ததன் காரணமாக தூக்கு மாட்டித் தற்கொலை செய்து இருப்பார் ' என்று கூறுகின்றனர்.

மேலும் பள்ளி மாணவன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:

திமுகவின் 15ஆவது பொதுத்தேர்தல் தேதி வெளியீடு!

Intro:டிவி பார்க்க விடாமல் கேபிள் இணைப்பை துண்டித்த தாய், விரக்தியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட பள்ளி மாணவன் பரிதாபமாக உயிரிழப்பு. Body:டிவி பார்க்க விடாமல் கேபிள் இணைப்பை துண்டித்த தாய், விரக்தியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட பள்ளி மாணவன் பரிதாபமாக உயிரிழப்பு.

சென்னை தாம்பரம் அடுத்த பீர்க்கன்காரணை, சீனிவாசநகர், லட்சுமி முதல் குறுக்கு தெருவில் வசித்து வருபவர் கொழஞ்சிநாதன்(48) சங்கீதா தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் முதல் மகன் தனியார் பள்ளியில் படித்து வருவதாகவும், இரண்டாவது மகன் அமுதீஸ்வரன்(14) மண்ணிவாக்கத்தில் தனியார் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த ஒரு ஆண்டு காலமாக வீட்டில் கேபிள் இணைப்பு கொடுக்க சொல்லி பெற்றோரிடம் இரு மகன்களும் கேட்டுக் கொண்டதின் பேரில் கேபிள் இணைப்பு கொடுக்கப்பட்டது. அந்த நாள் முதல் இருவரும் சரியாக படிக்காமல் டிவி பார்த்து வந்ததால் அவரின் தாய் கேபிள் இணைப்பை துண்டித்து விட்டு பணிக்கு சென்று விட்டார். பின்னர் அன்று மாலை 5 மணியளவில் வீட்டில் டிவியை ஆன் செய்து பார்த்த போது இணைப்பு துண்டிக்கப்பட்டிருந்ததால் விரக்தியடைந்த 8ம் வகுப்பு பள்ளி மாணவன் அமுதீஸ்வரன் படுக்கறையில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்

இந்த சம்பவம் குறித்து பீர்க்கன்காரணை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர் தகவலின் அடிப்படையில் வந்த போலீசார் அமுதீஸ்வரனின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் போலீசார் 174 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து அக்கம்பக்கத்தினர் கூறுகையில் அமுதீஸ்வரன் சரியாக படிக்கவில்லை தாயார் கண்டித்ததால் தான் தூக்கு மாட்டி தற்கொலை செய்து இருப்பார் என்று கூறுகின்றனர் இதைப்பற்றி அவரது பெற்றோரிடம் கேட்டபொழுது பதில் கூற மறுத்துவிட்டனர்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.