தமிழ்நாடு

tamil nadu

நீட் தேர்வில் வெற்றிபெற்ற மாணாக்கரை நேரில் அழைத்துப் பாராட்டிய அமைச்சர்!

By

Published : Nov 3, 2020, 1:15 AM IST

கரூர் : மாவட்டத்தில் நீட் தேர்வில் தேர்ச்சிப் பெற்ற 11 மாணவ, மாணவிகளுக்கு போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் பரிசுகள் அளித்துப் பாராட்டினார்.

sd
as

கரூர் மாவட்டத்தில் நீட் தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்த மாணவ, மாணவிகளுக்கு 7.5 சதவிகிதம் உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டத்தில் இரண்டு மாணவர்கள், ஒன்பது மாணவிகள் 113 மதிபெண்கள் பெற்றுத் தேர்வாகியுள்ளனர்.

இந்நிலையில், இந்த மாணவ, மாணவிகளை அதிமுக கரூர் அலுவலகத்தில் சந்தித்த போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், அவர்களுக்கு பரிசுகள் கொடுத்துப் பாராட்டினார்.

தொடர்ந்து, தமிழ்நாடு அரசின் சீரிய முயற்சியால் இந்த உள் ஒதுக்கீடு பெறப்பட்டதாகவும், அனைவரையும் நன்கு படித்து மருத்துவர் ஆகும்படியும் அவர் வாழ்த்தினார்.

இதையும் படிங்க...அரசு ஊழியர்களுக்கு ரூ.210 கோடியே 48 லட்சம் தீபாவளி போனஸ்!

ABOUT THE AUTHOR

...view details