தமிழ்நாடு

tamil nadu

17 வயது மாணவி பாலியல் வன்புணர்வு - போக்சோவில் இளைஞர் கைது!

By

Published : Oct 11, 2019, 11:40 PM IST

குமரி: 17 வயது மாணவியிடம் திருமணம் முடித்துக் கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி, மாணவியை பாலியல் வன்புணர்வுக்குட்படுத்திய சுஜின் என்பவரைக் காவலர்கள் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

the-youth-arrested-in-kanniyakumari-under-the-pocso-act

கன்னியாகுமரி பகுதியைச் சேர்ந்த கணவரை இழந்த பெண் ஒருவர், தனது மகள் மற்றும் மகனுடன் தனது தாயார் உதவியுடன் தனியாக வசித்து வந்துள்ளார். கணவர் இறந்தபிறகு ஏழ்மையில் வாடிய அவர், தனது மகனையும்,மகளையும் நன்கு படிக்கவைக்க வேண்டும் என்று எண்ணி சவுதியில் வீட்டு வேலைக்குச் சென்றுள்ளார்.

அங்கிருந்து ஒவ்வொரு மாதமும் பணம் அனுப்பி, தனது 17 வயது மகளை பாலிடெக்னிக் கல்லூரியில் சேர்த்து படிக்க வைத்துள்ளார். கல்லூரிக்கு தினமும் பேருந்தில் சென்று வரும் அவர் கடந்த நான்காம் தேதி, கல்லூரியிலிருந்து வீடு திரும்ப வில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது பாட்டி குளச்சல் மகளிர் காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளார்.

புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டதில் மாணவியின் வீட்டருகே உள்ள இளம்பெண் மீது காவலர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. சந்தேகத்தின் அடிப்படையில் அவரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டதில், சுஜின் என்பவர் மாணவியை கடத்திச்சென்று நாகர்கோவில் அருகே வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து மாணவியுடன் குடும்பம் நடத்தி வருவதாகத் தெரிவித்தார்.

இதன்பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த காவலர்கள் சுஜின் இருந்த வீட்டைச் சுற்றி வளைத்து, சுஜினை கைது செய்து மாணவியை மீட்டனர். இதன் பின்னர் நடத்திய விசாரணையில், பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்த சுஜின் பொறியாளர் வேலைப் பார்த்து வருவதாக, மாணவியிடம் பொய்களைக் கூறி அவரைக் காதல் வலையில் வீழ்த்தியுள்ளார் என்பதும்; பின்னர் மாணவியின் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சுஜின் மாணவியுடன் தனிமையில் இருந்துள்ளார் என்பதும் தெரிய வந்தது.

மேலும், கடந்த நான்காம் தேதி கல்லூரி சென்ற மாணவியை அழைத்துச் சென்று திருமணம் செய்து கொள்வதாகக் கூறி அருமனைப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வைத்து மாணவியை பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தியிருக்கிறார் என்பதும் அறியப்படுகிறது.

இதனையடுத்து சுஜின் மீது போக்ஸோ உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில், வழக்குப்பதிவு செய்து காவலர்கள் அவரை சிறையில் அடைத்தனர். பாதிக்கப்பட்ட மாணவியை மருத்துவ பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையும் படிங்க: பள்ளி மாணவிகளுக்கு ஆபாச படம் காட்டிய ஆசிரியர் கைது!

Intro:கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோட்டில் பாலிடெக்னிக் மாணவியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் கைது பைக் கம்பெனியில் எஞ்சினியர் வேலை கை நிறைய சம்பளம் என கூறி விதவிதமான பைக்குகளில் வலம் வந்து மாணவியை காதல் வலையில் வீழ்த்தி கடத்தி சென்று பலாத்காரம் செய்தது விசாரணையில் அம்பலம் மாணவியை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பிய குளச்சல் மகளிர் போலீசார் வாலிபரை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையிலடைத்தனர்Body:tn_knk_03_pokso_arrested_script_TN10005
கன்னியாகுமரி,எஸ்.சுதன்மணி

கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோட்டில் பாலிடெக்னிக் மாணவியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் கைது பைக் கம்பெனியில் எஞ்சினியர் வேலை கை நிறைய சம்பளம் என கூறி விதவிதமான பைக்குகளில் வலம் வந்து மாணவியை காதல் வலையில் வீழ்த்தி கடத்தி சென்று பலாத்காரம் செய்தது விசாரணையில் அம்பலம் மாணவியை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பிய குளச்சல் மகளிர் போலீசார் வாலிபரை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையிலடைத்தனர்


கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு பகுதியை சேர்ந்தவர் பாப்பா இவரது கணவர் பத்து ஆண்டுகளுக்கு முன் இறந்த நிலையில் தனது மகள் மற்றும் மகனுடன் தனது தாயார் உதவியுடன் தனியாக வசித்து வந்துள்ளார் மிகவும் ஏழையான பாப்பா கணவர் இறந்த நிலையில் மிக வறுமையில் வாடியுள்ளார் மகள் பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் நிலையில் மகளையும் மகனையும் எப்படியாவது மேற்படிப்பு படிக்க வைத்து ஆளாக்க வேண்டும் என்று எண்ணிய பாப்பா கழிந்த பத்து மாதங்களுக்கு முன் சவுதி அரேபியாவில் வீட்டு வேலை பார்பதற்காக சென்றுள்ளார் அங்கிருந்து உழைத்த ஊதியத்தின் மூலம் தனது 17-வயதான மகளை பாறசாலை அருகே உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் சேர்த்துள்ளார் வழக்கமாக தினமும் கல்லூரிக்கு பேருந்தில் சென்று மாலை வீடு திரும்பும் அந்த மாணவி கடந்த நான்காம் தேதி கல்லூரிக்கு சென்ற அவர் மாலை வெகு நேரமாகியும் வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த மாணவியின் பாட்டி தங்கம் அவரின் முதுமை வயதிலும் பல இடங்களிலும் தேடியுள்ளார் ஆனால் மாணவி குறித்து எந்த தகவலும் இல்லாத நிலையில் தங்கம் குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். புகாரின் பேரில் மாணவி மாயமானதாக வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை செய்ததில் மாணவியின் வீட்டருகே உள்ள ஒரு இளம் பெண் மீது சந்தேகம் ஏற்படவே அவரை பிடித்து விசாரணை நடத்தினர் விசாரணையில் அந்த மாணவியை தனது அக்காள் மகன் கடத்தி சென்றதையும் அந்த வாலிபர் நாகர்கோவில் அருகே வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து அந்த மாணவியுடன் குடும்பம் நடத்தி வருவதாகவும் தகவலளித்தார் உடனடியாக அங்கு விரைந்த போலீசார் அந்த வீட்டை சுற்றி வளைத்து மாணவியை மீட்டு வாலிபரை கைது செய்தனர் .பின்னர் மாணவியிடம் விசாரணை நடத்தியதில் அந்த வாலிபர் அருமனை பகுதியை சேர்ந்த 24-வயதான சுஜின் என்றும் தனது வீட்டருகே உள்ள அவரது சித்தி வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்லும் போது பழக்கம் ஏற்பட்டதாகவும் அவர் எஞ்சினியர் பட்டதாரி எனவும் பைக் கம்பெனியில் மாதம் இருபத்தி ஐந்தாயிரம் ரூபாய் சம்பளத்தில் வேலை பார்த்து வருவதாகவும் விதவிதமான பைக்குகளில் வரும் அந்த வாலிபர் தன்னை காதலிப்பதாகவும் என்னை திருமணம் செய்து கொண்டால் உங்கள் குடும்பமே செல்வாக்கில் உயரும் என்று ஆசை வார்த்தைகள் கூறி காதல் வலையில் வீழ்த்தியுள்ளார் இருவருக்கும் நெருக்கம் அதிகரிக்கவே சுஜின் ஆசை வார்த்தைகள் கூறியும் பரிசு பொருட்கள் வாங்கி கொடுத்தும் அந்த மாணவியின் வீட்டிலேயே அடிக்கடி மாணவியுடன் தனிமையில் இருந்துள்ளார் இந்நிலையில் கழிந்த 4-ம் தேதி மாணவி கல்லூரிக்கு செல்லும் போது தடுத்து நிறுத்திய சுஜின் மாணவியை தனது பைக்கில் ஏற்றி சுற்றி வரலாம் என்று அருமனை பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு அழைத்து சென்று மாணவியை திருமணம் செய்வதாக கூறி பலாத்காரம் செய்துள்ளார் மாலை வெகு நேரமாகியதால் மாணவியுடன் சுஜின் அந்த வீட்டிலேயே இரவை கழித்துள்ளார் இந்நிலையில் மாணவியின் பாட்டி புகாரளித்திருப்பதாக வாலிபரின் சித்தி தகவலத்ததின் பேரில் மாணவியை அங்கிருந்து நண்பர்களின் உதவியுடன் கடத்தி மாணவியின் தங்க சங்கிலியை கழற்றி அடகு வைத்து நாகர்கோவில் அருகே வீடு ஒன்று வாடகைக்கு எடுத்து சந்தேகம் வராமல் இருக்க தனது உறவு பெண்கள் சிலருடன் வாடகை வீட்டில் குடியேறிய நிலையில் போலீசார் பிடித்து விட்டதாகவும் கூறினார் இதனையடுத்து போலீசார் வாலிபர் சுஜின் இடம் விசாரணை நடத்தியதில் தான் பத்தாம் வகுப்பு வரை படித்து சொந்த வீடு கூட இல்லாமல் குடிசை வீட்டில் வசித்து வருவதாகவும் அவ்வப்போது கொத்தனார் வேலைக்கு செல்லும் அவர் கிடைக்கும் பணத்தில் புது பேண்ட் சட்டைகள் வாங்கி நண்பர்களின் பைக்குகளை இரவலுக்கு வாங்கி கெட்டப்பாக சுற்றி வந்ததாகவும் தனது சித்தி வீட்டிற்கு சென்ற போது மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டதாகவும் மாணவியின் தாயார் வெளிநாட்டில் இருப்பதால் மாணவியை காதல் வலையில் வீழ்த்தி திருமணம் செய்து கொண்டால் வசதியாக வாழலாம் என்று நினைத்து மாணவியிடன் எஞ்சினியர் என்றும் பைக் கம்பெனியில் கைநிறைய சம்பளத்தில் வேலை என்று கூறி நண்பர்களின் இருசக்கர வாகனத்தில் சுற்றி வந்ததாகவும் மாணவியின் வீட்டில் ஆண்துணை இல்லாததால் அவர் வீட்டிற்கே சென்று தனிமையில் இருந்து வந்ததாகவும் வெள்ளியன்று அழைத்து சென்றபோது ஆசை வார்தைகள் கூறி மாணவியை பலாத்காரம் செய்ததையும் ஒப்புக்கொண்டார் இதனையடுத்து மாணவியின் பாட்டி தங்கம் கொடுத்த புகாரில் மாணவியை கடத்தி ஏமாற்றி பாலாத்காரம் செய்ததாக போக்ஸோ உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த போலீசார் வாலிபர் சுஜினை கைது செய்து சிறையில் அடைத்தனர் பாதிக்கப்பட்ட மாணவியை மருத்துவ பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.Conclusion:

ABOUT THE AUTHOR

...view details