ETV Bharat / state

பள்ளி மாணவிகளுக்கு ஆபாச படம் காட்டிய ஆசிரியர் கைது!

author img

By

Published : Oct 11, 2019, 11:40 AM IST

தஞ்சாவூர்: ஒரத்தநாடு அருகேயுள்ள அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்றில் மாணவிகளுக்கு ஆபாச படம் காட்டிய ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

thanjavur

திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் சாரங்கபாணி (30). இவர், ஒரத்தநாடு அருகேயுள்ள அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்றில் ஆசிரியராகப் பணியாற்றிவந்தார்.

இவர் மாணவிகளிடம் ஒழுங்கீனமாக நடந்து கொள்வதாக, பெற்றோர்கள் பள்ளியில் புகார் அளித்துள்ளனர். இதனால் அவர், திருக்காட்டுப்பள்ளி அருகேயுள்ள இளங்காடு அரசுப் பள்ளிக்கு மாற்றப்பட்டார்.

இந்நிலையில், அவர் திருவோணம் பள்ளிக்கு மீண்டும் மாறுதல் வாங்கிக்கொண்டு பணிக்கு திரும்பியுள்ளார். இதனையறிந்த மாணவிகளின் பெற்றோர், பள்ளியின் முன்பு திரண்டு போராட்டம் நடத்தினர்.

இதையடுத்து அப்பள்ளியின் மாணவி ஒருவர், ஆசிரியர் சாரங்கபாணி மாணவிகளை தனியாக அழைத்து செல்போனில் ஆபாச படத்தைக் காட்டியதாக திருவோணம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

உடனடியாக இந்த வழக்கு பட்டுக்கோட்டை மகளிர் காவல் துறைக்கு மாற்றப்பட்டு சாரங்கபாணியை போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க:

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபர்; போக்சோ சட்டத்தில் சிறையில் அடைப்பு

Intro:தஞ்சாவூர்,அக்.11 –


மாணவிகளுக்கு ஆபாச படம் காட்டிய அரசு பள்ளி ஆசிரியர் கைது உதவி தலைமை ஆசிரியருக்கு கொலை மிரட்டல் விடுதாகவும் வழக்கு


Body:.
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே திருவோணம் அரசு மேல்நிலைப்பள்ளியில், திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவிலை பகுதியை சேர்ந்த சாரங்கபாணி,30, என்பவர் ஆசிரியராக பணியாற்றினர். இவர் 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை பாடம் எடுத்து வந்தவராவர். திருமணமாகாதவர். இவர் கடந்த மூன்று மாதங்களுக்கு முன், பள்ளியில் ஒழுங்கீனமாக நடந்து கொள்வதாக பெற்றோர்கள் அளித்த புகாரின் அடிப்படையில், கல்வி அதிகாரிகள் விசாரணை நடத்தி, திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள இளங்காடு அரசு பள்ளிக்கு மாற்றப்பட்டாது கூறிபிடதக்கது,
, அதனை தொடர்ந்து சாரங்கபாணி,திருவோணம் பள்ளிக்கு மீண்டும் மாறுதல் வாங்கிக்கொண்டு பணிக்கு திரும்பினார். இதை அறிந்த பெற்றோர்கள், பள்ளியின் முன்பு திரண்டு போராட்டம் நடத்தினர்.
சம்பவ இடத்திற்கு வந்த திருவோணம் போலீசார் போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களை சமதானம் செய்ய முயன்றனர். ஆனால் அவர்கள் போலீஸ் ஸ்டேஷனையும் முற்றுகையிட்டனர். இரவு 10 மணிவரை முற்றுகை போராட்டம் நீடித்தது. அப்போது அதே பள்ளியை சேர்ந்த மாணவி ஒருவர், ஆசிரியர் சாரங்கபாணி மாணவிகளை தனியாக அழைத்து செல்போனில் ஆபாச படத்தை காட்டியதாக கூறி புகார் அளித்தார். உடனடியாக இந்த வழக்கு பட்டுக்கோட்டை மகளிர் போலீசிக்கு மாற்றப்பட்டது. அவர்கள் விசாரித்து, ஆசிரியர் சாரங்கபாணியை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
இதை தொடர்ந்து, பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் தங்கதுரை, திருவோணம் போலீசில், கொடுத்த மற்றொரு புகாரில், ஆசிரியர் சாரங்கபாணியின் நடவடிக்கைகளை தட்டிக்கேட்டதால், தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததகாவும் கூறினார். இந்த புகாரின் மீது தனி வழக்கு பதிவு செய்யப்பட்ட விசாரணை நடந்து வருகிறது.Conclusion:Tanjore sudhakakaran 9976644011

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.