தமிழ்நாடு

tamil nadu

மதுவுக்கு அடிமையான தம்பி; அவரது உடன்சுற்றிய நண்பரின் பைக்கை எரித்த அண்ணன் கைது

By

Published : Sep 16, 2022, 5:45 PM IST

தம்பி நண்பரின் இருசக்கர வாகனத்தை எரித்த அண்ணன்
தம்பி நண்பரின் இருசக்கர வாகனத்தை எரித்த அண்ணன் ()

கன்னியாகுமரி அருகே தம்பியை மது போதைக்கு அடிமையாக்குவதாகக் கூறி, அவரது நண்பரின் இருசக்கர வாகனத்தை எரித்த அண்ணனை காவல்துறையினர் கைது செய்தனர்.

கன்னியாகுமரி:திருவட்டாறை அடுத்து செறுகோல் பகுதியைச்சேர்ந்தவர்கள், வேணுகுமார் மற்றும் பிபின் சகோதரர்கள். இதில் தம்பியான பிபின், உண்ணாமலைக்கடை அருகே வாரியவிளை பகுதியைச்சேர்ந்த மகேஷ் என்பவருடன் மது அருந்த சென்றுள்ளார்.

இதனையடுத்து மிகுந்த மது போதையில் இருந்த பிபினை, அவரது நண்பர் மகேஷ், செறுகோல் பகுதியிலுள்ள அவரது வீட்டிற்குக்கொண்டுவிட வந்துள்ளார். அப்போது வீட்டிலிருந்த பிபினின் அண்ணனான வேணுகுமார் தம்பியை குடிபோதைக்கு அடிமையாக்குவதாகக்கூறி நண்பனான மகேஷின் வாகனத்தை பறித்துள்ளார்.

இதை மகேஷ், தனது தந்தையிடம் கூறவே, அவரது தந்தை மனோகரன் வேணுகுமாரிடம், இருசக்கர வாகனத்தைக்கேட்டுள்ளார். அப்போது கோபமடைந்த வேணுகுமார், இரு சக்கர வாகனத்திலிருந்து பெட்ரோலை எடுத்து விட்டு, வாகனத்தை தீ வைத்துள்ளார். இதில் இருசக்கர வாகனம் முற்றிலுமாக எரிந்து நாசமானது.

பின்னர் மகேஷின் தந்தை மனோகரன் அளித்தப்புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த திருவட்டாறு காவல்துறையினர் இருசக்கர வாகனத்தை தீயிட்டு எரித்ததாக வேணுகுமாரை கைது செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பட்டப்பகலில் தம்பியை மதுபோதைக்கு அடிமையாக்குதாகக்கூறி, தம்பியின் நண்பரின் இருசக்கர வாகனத்தை எரித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மதுவுக்கு அடிமையான தம்பி; அவரது உடன்சுற்றிய நண்பரின் பைக்கை எரித்த அண்ணன்

இதையும் படிங்க:திருச்சியில் ஆம்னி வேன் மீது லாரி கவிழ்ந்த விபத்து - குழந்தை உட்பட இருவர் உயிரிழப்பு

ABOUT THE AUTHOR

...view details