தமிழ்நாட்டில் கரோனா தொற்றின் பரவல் உச்சத்தை தொட்டுள்ளது. இதனால் தமிழ்நாடு அரசு இன்று (ஏப். 10) முதல் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
குறிப்பாக தேநீர்க் கடைகள், உணவகங்களில் 50 விழுக்காடு வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே அனுமதி, பேருந்துகளில் நின்றுகொண்டு செல்லக்கூடாது, திரையரங்குகளில் 50 விழுக்காடு இருக்கைகள் மட்டுமே அனுமதிக்க வேண்டும் எனப் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
கரோனா நோய்த்தொற்றுப் பரவலில் சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது. மாவட்டத்தில் நாள்தோறும் நூற்றுக்கணக்கானோர் நோய்த்தொற்று பாதிப்பால் அவதிப்பட்டுவருகின்றனர்.