காஞ்சிபுரம்: வாலாஜாபாத்தில் உள்ள முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர் இல்லத்தில் கடந்த 9 மணி நேரமாக நடைபெற்ற லஞ்ச ஒழிப்புத் துறையினரின் திடீர் சோதனை நிறைவுபெற்றது. மேலும் வீட்டிலிருந்து சில முக்கிய ஆவணங்களையும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
பாலாஜி நகரில் வசிப்பவர், தனியார் பள்ளி நிர்வாகி அஜய்குமார். இவர் தற்போது நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தேவரியம்பாக்கம் கிராம ஊராட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மேலும் இவர் கடந்த அதிமுக ஆட்சியில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளராகப் பணிபுரிந்துள்ளார். இந்நிலையில், இன்று தமிழ்நாடு முழுவதும் லஞ்ச ஒழிப்புத்துறையினரால், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் வீடு, அவரது உறவினர்கள் மற்றும் உதவியாளர் இடங்கள் என 50-க்கும் மேலான இடங்களில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
8 பேர் கொண்ட குழு