தமிழ்நாடு

tamil nadu

உளுந்தூர்பேட்டை அருகே தொடர் பைக் திருட்டில் ஈடுபட்டவர் கைது

By

Published : Aug 7, 2021, 10:08 AM IST

உளுந்தூர்பேட்டை அருகே தொடர் பைக் திருட்டில் ஈடுபட்டவர் கைது
உளுந்தூர்பேட்டை அருகே தொடர் பைக் திருட்டில் ஈடுபட்டவர் கைது ()

உளுந்தூர்பேட்டை அருகே தொடர் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட நபரை காவல் துறையினர் கைதுசெய்து அவரிடமிருந்து எட்டு வாகனங்களைப் பறிமுதல்செய்தனர்.

கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டை பகுதியில் கடந்த சில மாதங்களாக இருசக்கர வாகனங்கள் அதிக எண்ணிக்கையில் திருடுபோயுள்ளன. இதனையடுத்து, உளுந்தூர்பேட்டை காவல் துணைக் கண்காணிப்பாளர் மணிமொழியன் உத்தரவின்பேரில் திருநாவலூர் காவல் ஆய்வாளர் சீனிவாசன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர சோதனை நடத்தப்பட்டது.

அப்போது திருநாவலூர் பகுதியில் சந்தேகப்படும்படியாகச் சுற்றித்திரிந்த நபரைப் பிடித்து காவல் துறையினர் விசாரணை செய்ததில் அவர் தலைவாசல் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் என்பது தெரியவந்தது.

மேலும் இவர் உளுந்தூர்பேட்டை பகுதியில் தொடர்ந்து இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டுள்ளதும் தெரியவந்தது. இதனையடுத்து விக்னேஷை கைதுசெய்து அவரிடமிருந்து எட்டு இருசக்கர வாகனங்களைப் பறிமுதல்செய்தனர்.

இதையும் படிங்க: பெண் அலுவலரைத் தப்பா பேசாதீங்க - அறிவுறுத்திய கிராம உதவியாளரை காலில் விழவைத்த கொடுமை!

ABOUT THE AUTHOR

...view details