தமிழ்நாடு

tamil nadu

கள்ளக்குறிச்சி பள்ளியை அரசே ஏற்று நடத்தக் கோரி நீதிமன்றத்தில் மனு

By

Published : Sep 24, 2022, 9:10 PM IST

கள்ளக்குறிச்சி பள்ளியை அரசு ஏற்று நடத்தக் கோரி- சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு!
கள்ளக்குறிச்சி பள்ளியை அரசு ஏற்று நடத்தக் கோரி- சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு! ()

கலவரத்துக்குள்ளான கள்ளக்குறிச்சி பள்ளியை அரசே ஏற்று நடத்த உத்தரவிடக் கோரி தேசிய மக்கள் சக்தி கட்சி தலைவர் ரவி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுவை தாக்கல் செய்துள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் உள்ள தனியார் பள்ளி அந்த பள்ளியில் பயின்ற மாணவி மரணத்தைத் தொடர்ந்து கலவரத்துக்கு உள்ளாது. அதன் காரணமாக பள்ளி கட்டடம், பொருட்கள், வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன. அந்த பள்ளி 3 மாதங்களுக்கும் மேலாக மூடப்பட்டுள்ளது. இந்த நிலையில் அந்த பள்ளியை அரசே ஏற்று நடத்தக் கோரி உயர் நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை தேசிய மக்கள் சக்தி கட்சி தலைவர் ரவி தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், இந்த பள்ளியில் 2004ஆம் ஆண்டு ஒரு மாணவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். நான்கு ஆண்டுகளுக்கு முன் கட்டணம் செலுத்தாத மாணவர்கள் பள்ளிக்கு வெளியில் நிறுத்தப்பட்டதால் பெரிய அளவில் போராட்டங்கள் நடத்துள்ளன. அப்போதே பள்ளி நிர்வாகத்தின் மீது தக்க நடவடிக்கை எடுத்திருந்தால் ஶ்ரீமதி மரண சம்பவம் நிகழ்ந்திருக்காது.

இந்தப் பள்ளியில் படித்த மாணவர்களை வேறு பள்ளிகளில் சேர்க்க முடியவில்லை என்றும், கட்டணம் செலுத்திவிட்டதால் மீண்டும் அதே பள்ளியில் சேர்ப்பதே சரியாக இருக்கும் என்றும் பெற்றோர் தெரிவிக்கின்றனர். இதன் காரணமாக பள்ளியை அரசு ஏற்று நடத்த கோரி செப்டம்பர் 14ஆம் தேதி மனு அளித்தும், பரிசீலிக்கப்படவில்லை. ஆகவே மாணவர்களின் பாதுகாப்பு கருதி சிறப்பு அதிகாரியை நியமித்து பள்ளியை அரசு கட்டுப்பாட்டில் நடத்த உத்தரவிடவேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:ஓய்வுபெற்ற பணியாளர்கள் அகவிலைப்படி உயர்வு... உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு...

ABOUT THE AUTHOR

...view details