தமிழ்நாடு

tamil nadu

செயின் பறிக்க வந்த கொள்ளையர்களை துடைப்பத்தால் துரத்திய மூதாட்டி

By

Published : Sep 9, 2022, 8:01 AM IST

தனது செயினை பறித்த கொள்ளையர்களை விரட்டி பிடிக்க முயன்ற மூதாட்டி!!
தனது செயினை பறித்த கொள்ளையர்களை விரட்டி பிடிக்க முயன்ற மூதாட்டி!!

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே செயின் பறிக்க வந்த கொள்ளையர்களை துடைப்பத்தால் துரத்திய மூதாட்டியின் செயல் பாராட்டப்பட்டுவருகிறது.

திண்டுக்கல் மாவட்டம்வத்தலக்குண்டு அருகே ஸ்டேட் பேங்க் காலனியை சேர்ந்தவர் முருகாயம்மாள்(75). இவர் நேற்று (செப் 8) தனது வீட்டின் வாசலை சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியே இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள் முருகாயம்மாளின் கழுத்தில் இருந்த 3 பவுன் செயினை பறித்து கொண்டு தப்பி ஓடினர்.


இதுதொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் பட்டிவீரன்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே மூதாட்டியிடம் செயினை பறித்த காட்சிகள் சிசிடிவி மூலம் வெளியாகி உள்ளது. அதில் மூதாட்டி வாசலை துடைப்பத்தால் பெருக்கிக் கொண்டிருக்கும் போது நோட்டமிடும் கொள்ளையர்கள் வீதியில் யாரும் இல்லாததை அறிந்து திடீரென மூதாட்டியின் அருகே வந்து செயினை பறித்துள்ளனர்.

இதைக்கண்ட மூதாட்டி தடுமாறாமல் கையில் இருந்த துடப்பத்தை கொண்டு செயினை பறித்த கொள்ளையனை அடிக்க தொடங்குகிறார். அடி வாங்கிய கொள்ளையர்கள் வேகமாக பைக்கை எடுத்து தப்பியோட, மூதாட்டி அவர்களை சிறிது தூரம் துடைப்பத்தோடு விரட்டும் காட்சிகள் பதிவாகியுள்ளன.

இதையும் படிங்க: குட்டையில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழப்பு

ABOUT THE AUTHOR

...view details