கரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. மேலும், அத்தியாவசிய தேவைகள் வாங்குவதற்கு வீட்டை விட்டு மக்கள் வெளியேற மாநில அரசு பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்துள்ளது.
இந்நிலையில், தருமபுரி மாவட்டம் மாரண்ட அள்ளி பகுதியைச் சேர்ந்த காவலர்கள் ஊரடங்கு உத்தரவை மீறி வெளியில் சுற்றித் திரிந்தவர்களை கண்டித்து வாகனங்களை பறிமுதல் செய்யாமல் அவர்களிடமிருந்து லஞ்சம் பெற்றதாகவும் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளருக்கு தெரிவிக்கப்பட்டது.