தமிழ்நாடு

tamil nadu

அரசின் சலுகைகளை வழங்கக்கோரி மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

By

Published : Oct 6, 2020, 6:57 PM IST

மாற்றுத்திறனாளிகள் போராட்டம்
மாற்றுத்திறனாளிகள் போராட்டம் ()

தருமபுரி: அரசின் சலுகைகளை வழங்கக்கோரி மாற்றுத்திறனாளிகள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த ஏரியூர் பகுதியில் வசிக்கும் மாற்றுத் திறனாளிகள், அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்க மாவட்ட அலுவலர்கள் மறுப்பதாக கூறி ஏரியூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள் நலத்திட்ட உதவிகளை வழங்காத அலுவலர்களை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.

மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

உடனே சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட அலுவலர்கள் மாற்றுத்திறனாளிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதனடிப்படையில் அவர்கள் போராட்டத்தை கைவிட்டு சென்றனர்.

இதையும் படிங்க: இலவச வீட்டு மனை பட்டா வழங்கக்கோரி மருத்துவர் சமுதாய மக்கள் மனு

ABOUT THE AUTHOR

...view details