தமிழ்நாடு

tamil nadu

அகவிலைப்படியை உயர்த்தக் கோரி அரசு ஊழியர்கள் சாலை மறியல்!

By

Published : Nov 9, 2020, 4:52 PM IST

அகவிலைப்படியை உயர்த்த கோரி அரசு ஊழியர்கள் சாலை மறியல்!

தருமபுரி: தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள அகவிலைப்படியை 20 விழுக்காடாக உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து தருமபுரியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போக்குவரத்து தொழிலாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு 10 விழுக்காடு அகவிலைப்படியை தமிழ்நாடு அரசு அறிவித்தது. இந்த அகவிலைப்படியை 20 விழுக்காடாக உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தருமபுரி அரசு போக்குவரத்து அலுவலகம் எதிரே தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து துறை ஊழியர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தருமபுரி பாரதிபுரம் பகுதியில் உள்ள அரசு போக்குவரத்து மண்டல அலுவலகம் முன்பு, தருமபுரி சேலம் பிரதான தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட போக்குவரத்து தொழிலாளர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

அப்போது அகவிலைப்படியை 20 விழுக்காடாக உயர்த்தி வழங்க வேண்டும், பண்டிகை முன்பணம் ரூ.10,000 வழங்க வேண்டும், 14ஆவது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை உடனே தொடங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் காரணமாக அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ABOUT THE AUTHOR

...view details