கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகே உள்ள வி.குமாரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த பசுபதி, பிரம்மன் ஆகிய இருவரும் திருப்பூரில் வேலை செய்து வந்தார்கள். தீபாவளிக்காக ஊருக்கு வந்த அவர்கள், தங்கள் நண்பரை விருத்தாசலத்திலிருந்து அழைத்து வருவதற்காக இருசக்கர வாகனத்தில் சென்றனர்.
அப்போது கார்குடல் கிராமம் அருகே வரும்போது சாலையிருந்த பள்ளத்தில் இறங்கிய இருசக்கர வாகனம், தடுமாறி விருத்தாசலத்திலிருந்து சிறுவரப்பூர் நோக்கி வந்து கொண்டிருந்த அரசுப் பேருந்து மீது மோதியது. இதில் இரண்டு இளைஞர்களும் தூக்கி எறியப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.