கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியில் தமிழிசைச் சங்கத்தின் 34ஆம்ஆண்டு நாட்டியப் பெருவிழா நிகழ்ச்சி இன்று கோலாகலமாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழ் இசை நாடகக் கலைஞர் திருநங்கை நர்த்தகி நடராஜனுக்கு நவரச நாயகி விருது வழங்கப்பட்டது. இதில், மேற்கு மண்டல ஐஜி கலந்துகொண்டு விருதினை நர்த்ததி நடராஜனுக்கு விருது வழங்கி சிறப்பித்தார்.
இந்நிகழ்வில் திருநங்கைகளின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து நர்த்தகி நடராஜனிடம், திருநங்கைகள் மற்றவர்கள் முகம் சுளிக்கும் வகையில் நடந்து கொள்வது ஏன் என்ற கேள்வியுடன் பேட்டியை தொடங்கினர்.
இதற்குப் பதில் அளித்த நர்த்தகி நடராஜன், 'திருநங்கைகள் விநோதமான உலகத்திலிருந்து வந்தவர்கள் என்ற கண்ணோட்டத்தை உடைத்து எறிந்து விட்டார்கள். சமூகத்தில் ஏன் திருநங்கைகள் இப்படி நடந்து கொள்கிறார்கள். மற்றவர்கள் முகம் சுளிக்கும் வகையில் வாழ்கிறார்கள் எனக் கேட்க முடியாத அளவிற்கு பெரும்பான்மையானவர்கள் சுயமரியாதையுடன் திறமையுடன் சொந்த முயற்சியால் வளர்ந்து வருகிறார்கள்.