தமிழ்நாடு

tamil nadu

வால்பாறை சுற்றுலாத் தலமாக மாற்றப்படும் -அதிமுக பொள்ளாச்சி வேட்பாளர் வாக்குறுதி

By

Published : Mar 25, 2019, 10:56 AM IST

அதிமுக வேட்பாளர்மகேந்திரன் ()

கோவை: வால்பாறை பகுதியை சுற்றுலாத் தலமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என பொள்ளாச்சி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் மகேந்திரன் தெரிவித்துள்ளார்.

பொள்ளாச்சி நாடாளுமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் மகேந்திரன் என்பவர்போட்டியிடுகிறார். அவர் இன்று வால்பாறை பகுதியில் உள்ள அதிமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

வால்பாறையில் ஐந்து கோடி ரூபாய்செலவில் ஐந்து ஏக்கர் பரப்பளவில் பூங்கா அமைக்க பணிகள் நடைபெற்றுவருகிறது.மேலும் சிறுவாணி ஆற்றங்கரையோரத்தில் வசித்துவரும் மக்களுக்கு குடிசைமாற்று வாரியத்தின் மூலம் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும்.

அதேபோல் வால்பாறை பகுதியை சுற்றுலாத் தலமாக அறிவிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

வால்பாறை பகுதியை சுற்றுலா தளமாக அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் மகேந்திரன் உறுதி
பொள்ளாச்சி : மார்ச் : 24
பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் மகேந்திரன் இன்று வால்பாறை பகுதியில் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார் அப்போது நடைபெற்ற கூட்டத்தில் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கலந்துகொண்டு வால்பாறை தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட முக்கிய பிரச்சனைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார் பின்னர் செய்தி யாளர்களிடம் வேட்பாளர் மகேந்திரன் பேசும் போது வால்பாறையில் ரூபாய் 5 கோடி செலவில் 5 ஏக்கர் நிலத்தில் பூங்கா அமைக்க பணிகள் நடைபெற்று வருவதாகவும் மேலும் 3 கோடி செலவில் பிளாக் தென்றலைப் போல பூங்கா அமைக்க நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருவதாகவும் மேலும் ஆற்றங்கரையோரத்தில் குடியிருந்து வரும் மக்களுக்கு குடிசை மாற்று வாரியத்தின் மூலம் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும் அதேபோல் வால்பாறை பகுதியை சுற்றுலா தலமாக அறிவிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details