தமிழ்நாடு

tamil nadu

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மளிகைக் கடைக்காரர் போக்சோவில் கைது!

By

Published : Sep 18, 2022, 9:10 PM IST

arrest

பொள்ளாச்சி அருகே சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மளிகை கடைக்காரரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

கோவை:அரசு பள்ளி ஒன்றில், ஆசிரியை மாணவிகளுக்கு பாலியல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, குட் டச், பேட் டச் குறித்து எடுத்துரைத்துள்ளார். அப்போது 13 வயது மாணவி ஒருவர் எழுந்து தனக்கு நடந்த பாலியல் வன்கொடுமை குறித்தும், தன்னைப் போலவே சில மாணவிகளும் பாதிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அப்பள்ளியின் ஆசிரியர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன்பேரில், போலீசார் விசாரணை நடத்தினர். மளிகைக் கடை நடத்தி வரும் நடராஜ் என்பவர் கடைக்கு வரும் சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது.

மேலும், சுமார் 15 மாணவிகளுக்கு அவர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அந்த நபர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: சாலையில் மாடுகள் சுற்றித்திரிந்தால் உரிமையாளருக்கு அபராதம் - சென்னை மாநகராட்சி எச்சரிக்கை

ABOUT THE AUTHOR

...view details