தமிழ்நாடு

tamil nadu

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் தேசிய செயற்குழு உறுப்பினர் இஸ்மாயில் வீட்டில் என்ஐஏ சோதனை

By

Published : Sep 22, 2022, 10:43 AM IST

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் தேசிய செயற்குழு உறுப்பினர் இஸ்மாயில் வீட்டில் என்ஐஏ சோதனை

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் தேசிய செயற்குழு உறுப்பினர் இஸ்மாயில் கோவை வீட்டில் என்ஐஏ அலுவலர்கள் சோதனை செய்து வருகின்றனர்.

கோயம்புத்தூர்: பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி திரட்டி வழங்கியதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா (பிஎப்ஐ) மற்றும் எஸ்டிபிஐ கட்சியின் அலுவலகங்களில் என்ஐஏ அலுவலர்கள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கியமாக தமிழ்நாடு, கேரளா என பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா தொடர்புடைய 60 இடங்களில் இன்று அதிகாலை முதல் அதிரடி சோதனை நடத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் கோயம்புத்தூர், மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், கடலூர், திருநெல்வேலி மற்றும் தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் சோதனை நடத்தப்படுகிறது.

இந்த வகையில் கோவை கரும்புக்கடை பகுதியில் உள்ள பிஎப்ஐ அமைப்பின் தேசிய செயற்குழு உறுப்பினர் இஸ்மாயில் வீட்டில் இன்று அதிகாலை 5.30 மணி முதல் என்ஐஏ அலுவலர்கள் சோதனை மேற்கொண்டனர். இதனால் அப்பகுதி முழுவதும் மாநகர போலீசார் மற்றும் துப்பாக்கி ஏந்திய சிஆர்பிஎப் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் தேசிய செயற்குழு உறுப்பினர் இஸ்மாயில் வீட்டில் என்ஐஏ சோதனை

அப்போது இந்த சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து பிஎப்ஐ அமைப்பைச் சேர்ந்தவர்கள், காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் சாலையில் தடுப்புகளை ஏற்படுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து இஸ்மாயிலை என்ஐஏ அலுவலர்கள் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.

இதனிடையே கர்நாடகாவில் இருந்து இன்று அதிகாலை ரயில் மூலம் கோவை வந்த இரண்டு பேரை பிடித்த என்ஐஏ அலுவலர்கள், அருகில் உள்ள காவலர் அருங்காட்சி மையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா, எஸ்டிபிஐ தொடர்புடைய 60 இடங்களில் என்ஐஏ சோதனை

ABOUT THE AUTHOR

...view details