கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அருகேயுள்ள கோவில்பாளையம் பகுதியில் அதிமுக இளைஞர் இளம்பெண்கள் பாசறையின் கருத்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அப்போது, பொள்ளாச்சி ஜெயராமன் பேசியதாவது, "முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மக்களைச் சந்தித்துக் குறைகளைக் கேட்டுவருகிறார். தமிழ்நாடு வளர்ச்சிப் பாதையில் செல்கிறது. முதலமைச்சர் ஆக்கப்பூர்வமான திட்டங்களை நிறைவேற்றிவருகிறார்" எனத் தெரிவித்தார்.
மேலும் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பேசுகையில், "தமிழ்நாட்டில் இருக்கும் பிரச்னைகளை வைத்து அரசியல் செய்பவர் ஸ்டாலின். பிரச்னைகளுக்கு தீர்வு காண்பவர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. கருணாநிதியின் மகன் என்ற ஒரு தகுதியைத் தவிர ஸ்டாலினுக்கு தலைவராவதற்கு வேற எந்த தகுதியும் இல்லை.