தமிழ்நாடு

tamil nadu

ஓடும் பேருந்தில் ரூ.80 லட்சத்துடன் சென்ற நபர் - போலீசார் விசாரணை

By

Published : Nov 10, 2022, 5:17 PM IST

Etv Bharat
Etv Bharat

போதிய ஆவணங்கள் இன்றி பேருந்தில் பயணி ஒருவர் வைத்திருந்த ரூ.80 லட்சத்தை காட்டூர் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

கோவை:கரூர் மாவட்டத்தைச்சேர்ந்த குமார் என்பவர் இன்று (நவ.10) கோவை காந்திபுரம் மத்தியப்பேருந்து நிலையத்தில் பேருந்து ஒன்றில் பேக்குடன் ஏரியுள்ளார். அப்போது, அவர் வைத்திருந்த பேக்கிற்கு டிக்கெட் எடுக்கும்படி நடத்துநர் வலியுறுத்தியுள்ளார்.

ஆனால், குமார் டிக்கெட் எடுக்க மறுக்கவே நடத்துநருக்கும் குமாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, பேருந்தை காட்டூர் காவல் நிலையத்திற்கு ஓட்டிச்சென்று புகார் அளிக்கப்பட்டுள்ளது. அப்போது விசாரித்த போலீசார், குமார் வைத்திருந்த பேக்கை சோதனையிட்டதில் உள்ளே, கட்டுக்கட்டாக ரூ.80 லட்சம் பணம் இருந்தைக்கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

ஓடும் பேருந்தில் கட்டுக்கட்டாக ரூ.80 லட்சம்..காட்டூர் போலீசார் விசாரணை

இதுகுறித்து குமாரிடம் விசாரணை மேற்கொண்டபோது, பைனான்ஸ்க்காக வைத்திருந்த பணம் என்று தெரிவித்துள்ளார். ஆனால், பணத்திற்கான போதிய ஆவணங்கள் ஏதும் இல்லாததால் குமாரை கைது செய்த காட்டூர் போலீசார் பணத்தைப் பறிமுதல் செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: சிசிடிவி: பஞ்சாப்பில் தேரா சச்சா சவுதா ஆதரவாளார் சுட்டுக் கொலை...!

ABOUT THE AUTHOR

...view details