கோயம்புத்தூர்: திருப்பூர் மாவட்டம் காரணம்பேட்டையை சேர்ந்த பிரவீன் குமார் என்பவர், தனது நண்பரான கோவை சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீஹரியுடன் இரு தினங்கள் முன்பு இரு சக்கர வாகனத்தில் மேட்டுப்பாளையம் சென்றார். அதன்பின் ஊருக்கு திரும்புகையில் காளப்பட்டி நான்கு முனை சாலை அருகே வந்த போது, இருசக்கர வாகனத்தின் பின்னால் வேகமாக வந்த லாரி அவர்கள் சென்ற இருசக்கர வாகனம் மீது மோதியது.
இதில் பிரவீன்குமாரின் உடல் மீது லாரியின் பின் சக்கரம் ஏறியதால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஸ்ரீஹரி பலத்த காயம் அடைந்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.