ETV Bharat / state

புதுக்கோட்டையில் நேருக்கு நேர் மோதிய ஆம்னி பேருந்துகள்!

author img

By

Published : Dec 29, 2022, 11:38 AM IST

புதுக்கோட்டை அருகே அரசு பேருந்தும், தனியார் ஆம்னி பேருந்தும் மோதிக்கொண்ட விபத்தில் 100 பயணிகள் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்.

நேருக்கு நேர் மோதிய 2 பேருந்துகள் - உயிர் தப்பிய 100 பயணிகள்!
நேருக்கு நேர் மோதிய 2 பேருந்துகள் - உயிர் தப்பிய 100 பயணிகள்!

புதுக்கோட்டை அருகே அரசு பேருந்தும் தனியார் ஆம்னி பேருந்தும் மோதிய விபத்தில் 100 பயணிகள் உயிர் தப்பினர்

புதுக்கோட்டை: விராலிமலை அருகே உள்ள கொடும்பாளூர் பகுதியில், மதுரையில் இருந்து திருச்சி நோக்கி வந்த ஆம்னி பேருந்து கட்டுப்பாட்டை இழந்த நிலையில், அரசு பேருந்து மீது நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த 4 பேரை மீட்ட பொதுமக்கள், அவர்களை கொடும்பாளூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அதேநேரம் இந்த கோர விபத்தில் 100 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். பின்னர் இந்த இரண்டு பேருந்துகளில் பயணம் செய்த பயணிகள், அந்த வழியாகச் சென்ற வேறு பேருந்துக்கு மாற்றம் செய்யப்பட்டு பயணம் செய்தனர்.

மேலும், இந்த பகுதியில் தொடர்ந்து விபத்து நிகழ்வதால், காவல் துறையினர் பேரி கார்டுகள் அமைத்தும், சிசிடிவி கேமராவை பொருத்தி கண்காணிக்கவும் வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: டேங்கர் லாரி மீது ஆம்னி பேருந்து மோதி விபத்து

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.