தமிழ்நாடு

tamil nadu

வெங்கட் பிரபு தந்த புது அப்டேட்

By

Published : Jul 30, 2023, 12:28 PM IST

“நண்பன் ஒருவன் வந்த பிறகு” என்னும் திரைப்படத்தை அவரது நண்பரான ஆனந்த் இயக்கவுள்ளார் என்னும் வீடியோவை வெங்கட் பிரபு, தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

nanban oruvan vantha piragu
நண்பன் ஒருவன் வந்த பிறகு

சென்னை:தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநரும், நடிகருமாக வலம் வருபவர், வெங்கட்பிரபு. இவர் தமிழ் சினிமாவில் தனக்கென்று தனியாக ஒரு ரசிகர் பட்டாளத்தையே வைத்திருப்பவர். இவர் எடுக்கும் படங்கள் அனைத்தும் வித்தியாசமான முறையிலும், காமெடியாகவும் அமையும். வெங்கட் பிரபு - யுவன் கூட்டணியில் அமையும் பாடல்கள் எல்லாம் பட்டிதொட்டி எங்கும் தெறிக்கும்.

இவர் எடுக்கும் அனைத்துப் படங்களிலும் பிரேம்ஜி இருப்பார். தனது தம்பிக்கென தனியாக ஒரு கேரக்டரை உருவாக்கிவிடுவார், வெங்கட் பிரபு. இவர் சமீபத்தில் நடிகர் நாக சைதன்யாவை வைத்து “கஸ்டடி” என்னும் திரைப்படத்தை தமிழ், தெலுங்கு என ஒரே நேரத்தில் இரு மொழிகளில், மிகப்பெரிய பொருட்செலவில் உருவாக்கி பரவலான வெற்றி கண்டார். இப்படத்தை பவன் குமார் வழங்க ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் பேனரின் கீழ் ஸ்ரீனிவாசா சித்தூரி தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, தமிழ் சினிமாவில் நடிகர் சிம்பு கூட்டணியில் இவர் இயக்கிய “மாநாடு” திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை தந்தது. மேலும், டைம் லூப் திரைப்படத்தை தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்திய இயக்குநர் என்ற பெயரைப் பெற்றார். அதேபோல், முன்னர், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித் குமாரை வைத்து மிகப்பெரிய வெற்றி படமான “மங்காத்தா” திரைப்படத்தை இயக்கினார். பின்னர், தளபதி விஜயை வைத்து எப்போது இயக்குவார்? என அனைவரும் எதிர்பார்த்த நிலையில், தற்போது “தளபதி 68” படத்தை வெங்கட் பிரபு இயக்கவுள்ளார் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்து ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது.

இப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். யுவன் - வெங்கட்பிரபு - விஜய் கூட்டணி திரைப்படம் மிகப்பெரிய வெற்றிபடமாக அமையும் என ரசிகர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் இப்படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயிமென்ட் தயாரிக்கிறது. இப்படத்தைப் பற்றிய அப்டேட் தற்போது விஜய் நடித்துள்ள “லியோ” படம் வெளிவந்த பிறகு தான் சொல்ல முடியும் என ஒரு விழா மேடையில் வெங்கட் பிரபு கூறியிருந்தார்.

இந்நிலையில் நேற்று தனது டிவிட்டர் பக்கத்தில் வெங்கட் பிரபு நாளை காலை 11மணிக்கு அப்டேட் இருக்கு என பதிவு வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து இன்று (ஜூலை 30) வெங்கட்பிரபு, அப்டேட் என தனது டிவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நண்பர்கள் தினத்தை முன்னிட்டு “நண்பன் ஒருவன் வந்த பிறகு” என்னும் திரைப்படத்தை தனது நண்பரான ஆனந்த் இயக்கவுள்ளார் என்னும் வீடியோவை வெளியிட்டுள்ளார். இதனை ரசிகர்கள் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

இதையும் படிங்க:"குரைக்காத நாயுமில்லை, குறை சொல்லாத வாயுமில்லை"... ரஜினியின் குட்டிக் கதை யாருக்கு?

ABOUT THE AUTHOR

...view details