தமிழ்நாடு

tamil nadu

புதுமனை புகுவிழாவில் சோகம்… மின்சாரம் தாக்கி இளைஞர் பலி!

By

Published : Feb 23, 2023, 4:04 PM IST

தாம்பரம் அருகே வீட்டின் கிரகபிரவேசத்திற்காக பந்தல் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த வாலிபர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

Etv Bharat
Etv Bharat

சென்னை தாம்பரம் அடுத்த அகரம்தென் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீனிவாசன் (20) மற்றும் அரவிந்த்குமார் (25) அப்பகுதியில் உள்ள பந்தல் கடையில் வேலைபார்த்து வந்துள்ளனர். இந்நிலையில் கஸ்பாபுரம் பகுதியில் படவேட்டம்மன் தெருவில் அகஸ்டின் என்பவருக்குச் சொந்தமான புதிய அடுக்குமாடி குடியிருப்பிற்கு இன்று கிரகப்பிரவேசம் நடைபெற இருந்தது.

இதற்காக நேற்று இரவு ஸ்ரீனிவாசன் மற்றும் அரவிந்த்குமார் பந்தல் அமைப்பதற்காக இரண்டாவது மாடியில் இருவரும் இரும்புக் கம்பி கொண்டு சென்றபோது எதிர்பாராத விதமாக அருகே இருந்த உயர் மின் அழுத்த கம்பியில், இரும்புக்கம்பி பட்டதில் இரண்டாவது தளத்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட சீனிவாசன் தலையில் பலத்த காயமடைந்தார்.

மேலும் அரவிந்த்குமார் சிறு காயங்களுடன் உயிர்தப்பினார். மின்சாரம் பாய்ந்த இருவரின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் இருவரையும் மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சீனிவாசனை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். தகவல் அறிந்து சென்ற சேலையூர் போலீசார் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: ஓபிஎஸ், சசிகலா, தினகரனுக்கு அதிமுகவில் இடமில்லை: ஜெயக்குமார் திட்டவட்டம்!

ABOUT THE AUTHOR

...view details