தமிழ்நாடு

tamil nadu

அடுக்குமாடி குடியிருப்பில் ஆளில்லா வீட்டில் ஆட்டையை போடும் திருடன்

By

Published : Aug 2, 2022, 7:56 PM IST

தெருவில் அனைத்து வீடுகளையும் வெளிப்புறமாக பூட்டி விட்டு ஆளில்லா வீட்டை ஆட்டையைப் போடும் கும்பல்..!

தாம்பரம் அருகே அடுக்குமாடி குடியிருப்பில் அனைத்து வீடுகளின் கதவுகளை வெளிப்புறமாக பூட்டிவிட்டு பின்பு ஆளில்லாத வீட்டின் கதவினை உடைத்து 13 சவரன் நகையை கொள்ளையடித்த வினோத சம்பவம் அரங்கேறியுள்ளது.

சென்னை:தாம்பரம் அடுத்த காவல் சோதனை மையம் அருகே உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்துவரும் சதீஷ்குமார் நேற்று முன்தினம் ஆவடியிலுள்ள தனது உறவினர் வீட்டிற்குச் சென்றிருந்தார்.

இந்நிலையில், பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் சதீஷ்குமார் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அவருக்கு தகவல் கொடுத்தனர்.

சிசிடிவி

உடனே சதீஷ்குமார் தனது வீட்டிற்கு வந்து பார்த்தபோது 13 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து தாம்பரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

அதில், திருடன் கொள்ளையடிக்கும் முன்பு அடுக்கு மாடியில் குடியிருக்கும் அனைத்து வீடுகளை வெளிப்புறமாக தாழ்ப்பாளை பூட்டிவிட்டு பின்பு கொள்ளையடிக்கச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: வெள்ளை அடிக்க வந்தவர்கள் வங்கியில் கொள்ளை; 3 பேரிடம் விசாரணை

ABOUT THE AUTHOR

...view details